இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பைச் சேர்ந்தவரின் தந்தை மாலைத்தீவு பிரஜை எனவும் தாய் இலங்கை பிரஜை எனவும் காவல்துறையினர் குறிப்பிடுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் ஹெஸ்புல்லா தரப்பினருக்கு எதிராக நடத்தும் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகளை இலக்கு வைத்துச் சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் அவர்களுக்கு உதவிகளை வழங்கும் தரப்பினர் தொடர்பில் ஆராய்வதற்காக காவல்துறையினர் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.