பாதுகாப்புக் குழுக்களின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி மற்றும் பிரதமருக்கிடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்படி, பாதுகாப்புக் குழுக்களின் பிரதானி ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் பிரதமரை சந்தித்தனர். புதிய பிரதமர் பதவியேற்ற பின்னர் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்த முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.