கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இதுவரை 2,447 இலங்கையர்கள் விவசாயத் தொழில்துறைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்த தொழில்துறைக்காக மேலும் 61 இலங்கையர்கள் அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கான பயணச் சீட்டு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.