விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 2 ரஷ்யப் பிரஜைகள் கண்டி – ஹந்தானையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கண்டி சுற்றுலா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 39 மற்றும் 32 வயதான தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.