Header image alt text

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப்பிணைகளில் முன்னாள் அமைச்சரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. Read more

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு எனது மாலைநேர வணக்கங்கள்.
நாகலிங்கம் இரட்ணலிங்கமாகிய நான் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் என்கின்ற அடிப்படையில் உங்களுடன் எமது கட்சி சார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது வெறும் தேர்தல் போட்டிக்கான ஒரு அமைப்பல்ல. தமிழ் மக்களின் உரிமைக்காகவும், சுதந்திரமான வாழ்வுக்காகவும் செந்நீரையும் கண்ணீரையும் சிந்தி, அளவிடமுடியாத தியாகங்கள் புரிந்த விடுதலைப் போராட்ட அமைப்புகளான புளொட், ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய அமைப்புகளின் கூட்டு முன்னணியாகும்.

Read more

2014.10.29
பதுளை மாவட்டம் கொஸ்லந்த, மீரியபெத்தை பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் பத்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. மீரியபெத்தை மண்சரிவில் மரணித்த 37பேரின் உறவுகளின் துயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பங்குகொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம். மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கும் பணியில் கழகமும் பங்கெடுத்திருந்ததையும் இந்நாளில் நினைவு கூருகின்றோம்.

Read more

நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி எடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதிநிதிகளை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். Read more

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்திலிருந்து மெகசின் ஒன்றும்இ ரீ 56 ரக தோட்டாக்கள் 57 உம் மீட்கப்பட்டுள்ளன. இன்று மதியம் 12:10 அளவில் பெலியத்த தொடருந்து நிலையத்தைச் சென்றடைந்த 8050 என்ற இலக்கம் கொண்ட தொடருந்தின் 3ஆம் வகுப்பு பெட்டியொன்றின் ஆசனத்திற்குக் கீழிருந்த பையொன்றிலிருந்து இவை மீட்கப்பட்டதாக பெலியத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read more

அரசாங்கத்தினால் எந்தவொரு விதத்திலும் புதிய கடன்கள், எந்தவொரு நாட்டில் இருந்து அல்லது நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அரசாங்கம் பணத்தை அச்சிட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் பொய்யானவை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கான வேதனம் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நிலுவையிலுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையின் பிரகாரம் உரிய வேதன உயர்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை தவிர்ந்து, அடுத்த மாதம் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. Read more

எமது கூட்டணிக்கென, வானலையில் ஒதுக்கப்பட்ட முதலாவது பகுதிக்கான (நாளை 29.10.2024 மாலை 03.15 – 03.30) எமது கூட்டணி சார்பான உரை, இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை அலைவரிசைகளில் (102.1) (102.3) ஒலிபரப்பாக உள்ளது என்பதை அறியத் தருகிறோம்.