இலங்கையில் மேலும் நால்வர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 588 ஆக  அதிகரித்துள்ளது.

இன்றைய நாளில் மாத்திரம் இதுவரையில் 65 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 126 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.