வடக்கு மார்க்கத்திலான தொடருந்து சேவை, நாளை மறுதினம் முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ்தேவி தொடருந்து சேவை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அனுராதபுரத்துக்கும் பெலியத்தவுக்கும் இடையிலான ரஜரட்ட ரெஜின தொடருந்து சேவையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.