அடுத்த வருடத்தில் சீன அரசாங்கம் இலங்கையின் புதிய அரசாங்கத்தினது அபிவிருத்தி தேவைப்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செயற்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ச்சி ஜென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகிறது.

அந்தவகையில், மனித வளம், சகோதரத்துவத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சீன அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.