Header image alt text

புளொட் அமைப்பின் ஜேர்மனி கிளையினரால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.! (படங்கள் இணைப்பு)

velo01தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜேர்மன் கிளையினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் வவுனியா வெளிக்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு 06.08.2016 சனிக்கிழமை அன்று  ‘கல்வியால் எழுவோம்’ செயற்றிட்டத்தின் மூலம்  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்  வவுனியா மாவட்ட  தலைமைக் காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. Read more

31வது ஒலிம்பிக் பிரேசில் ரியோ நகரில் தொடங்கியது
 
olympics31வது நவீன கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனெரோவில் பிரமிக்கத்தக்க தொடக்கவிழா வைபவத்துடன் தொடங்கின.

ரியோ நகரின் மரக்கானா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த வைபவத்தில், பிரேசிலின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்தையும், அதன் பிரசித்திபெற்ற சுற்றுச்சூழலையும் வெளிக்காட்டும், ஒளி, இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தேறின. Read more

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் கிணற்றில் அகழ்வுப் பணிகள் நிறைவு

 tirukedheeswaramதிருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் உள்ள கிணற்றின் அகழ்வுப் பணிகள் நாலாவது நாளாகிய வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ராஜபக்ச தெரிவித்திருக்கினறார்.

கடந்த திங்கட்கிழமை இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் பதினைந்து அடி ஆழம் வரையில் அகழப்பட்ட இந்தக் கிணற்றில் இருந்து சில எலும்புகள், பல் ஒன்று நாணயம் ஒன்று உட்பட பல தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. Read more

nuvareliyaமலையகத்திலுள்ள பெருந்தோட்டம் ஒன்றின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இந்த தீர்ப்பை வழங்கினார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் உடன் பிறந்த சகோதரர்கள். ஏனைய மூன்று பேரும் இரு சகோதரர்களின் பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகின்றது. Read more

பொதுமக்களின் நிலத்தை கடற்படையினருக்கு கொடுக்க முள்ளிவாய்க்கால் மக்கள் எதிர்ப்பு

mullivaikalமுள்ளிவாய்க்கால் பகுதியில் வட்டுவாகல் என்னுமிடத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கு அந்தக் காணிகளை கையகப்படுத்துவதற்காக நில அளவை செய்யச் சென்ற அதிகாரிகள் அப்பிரதேச மககளினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் கிழக்கில் வட்டுவாகல் என்னுமிடத்தில் 617 ஏக்கர் காணியை 3 ஆம் தேதி புதன்கிழமை முதல் 5 ஆம் தேதி வரையில் கடற்படையினருக்காக நில அளவை செய்யவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அளவையாளர் பா.நவஜீவன் அறிவித்திருந்தார். Read more

யாழ். நவக்கிரி இந்து இளைஞர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-
navakiri (2)யாழ். நவக்கிரி இந்து இளைஞர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நிகழ்வு நவக்கிரி இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் திரு, நிர்மலநாதன் அவர்களின் தலைமையில் 31.07.2016 அன்று இடம்பெற்றது.  மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. ராதாகிருஸ்ணமூர்த்தி (அதிபர், அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை, நவக்கரி), திரு. கேசவன் (சமுர்த்தி உத்தியோகத்தர்), திரு. சுதர்சன் (கிராம சேவையாளர், நவக்கிரி), திருமதி ஞானமாலா (பொருளாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு. த.பாலசுப்பிரமணியம் (முன்னைநாள் மின்சார சபை உத்தியோகத்தர்), அ.கவிதா (குடும்பநல உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்துசிறப்பித்தனர். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், கொடியேற்றல் என்பன இடம்பெற்று விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றன. இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெற்றோர்களும், பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Read more

plote......n

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு தீர்மானம்-


urban councila and local govern2012ம் இலக்க 22வது உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இது குறித்து கலந்துரையாடல்களை நடாத்தி அமைச்சரவைக்கு பணிப்புரையை சமர்ப்பிப்பது தொடர்பில், அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தக் குழுவின் தலைவராக அமைச்சர் பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஏனைய உறுப்பினர்களாக ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜெயந்த, வஜிர அபேவர்த்தன, ரிஷாட் பதியூதின், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் குழுவின் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

முன்னாள் போராளிகளின் மரணம், சர்வதேச மருத்துவக்குழு ஆய்வுக்கு கோரிக்கை-

sadsdsஇறுதி யுத்தத்தின்போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் தொடர் மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள அவர்களது உறவினர்கள், இதுகுறித்து சர்வதேச மருத்துவக் குழுவினால் ஆய்வுசெய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் இன்று நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களது கருத்தறியும் செயலணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஒருவர், இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அத்தோடு, முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டுவரும் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றும், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களது காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் இதன்போது பலர் கருத்துத் தெரிவித்தனர். மேலும், தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படாமல் அதிகார பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வட்டுவாகலில் படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு-

vadduvahalமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் கடற்படையினருக்கு வழங்கப்படவுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதற்காக நாளையதினம் நில அளவை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை அரச நில அளவையாளர் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார். நாளைகாலை ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நிலஅளவை நடவடிக்கை, 5ஆம் திகதிவரை தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே. குறித்தபகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும் இடத்திற்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த விடயத்தினை கேள்வியுற்ற முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க…
Read more

சுதுமலை ஈஞ்சடி நாவலர் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-

sudumalai (5)யாழ். சுதுமலை ஈஞ்சடி நாவலர் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நாவலர் பாடசாலையின் ஸ்தாபகத் தலைவர் திரு. ஈ.பேரின்பநாயகம் அவர்களது தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி கந்தையா சிறீகணேசன், அ.பேரின்பநாயகம் (அதிபர், மானிப்பாய் மெமோரியல், ஆங்கிலப் பாடசாலை), திரு.மகேந்திரன் (அதிபர். சிம்மயா பாரதி வித்தியாசாலை, சுதுமலை), வி.கே. தனபாலன் (சுதுமலை வடக்கு கிராம அலுவலகர்), திரு. கௌரிகாந்தன் (தலைவர், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்), செல்வி ம.பிரியதர்சினி (தலைவர் சுதுமலை வடக்கு மாதர் அபிவிருத்திச் சங்கம்), திருமதி நளினி பரஞ்சோதிநாதன் (தலைவர், சுதமலை தெற்கு மாதர் அபிவிருத்திச் சங்கம்) ஆகியோரும், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்விலே உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள், Read more

ஐ.தி சம்பந்தன் அவர்களுடைய இரண்டு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-

I.T sampanthan books release 31.07 (3)ஐ.தி சம்பந்தன் அவர்களுடைய இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் சுடரொளி வெளியீட்டுக் கழகம் ஊடாக நேற்றையதினம் (31.07.2016) மாலை வெளியிட்டு வைக்கப்பட்டன. தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் சாதனையாளர் ஐ.தி. சம்பந்தன் அவர்களின் விழாமலர் என்பனவே இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் விரிவுரையாளர்கள் பலரும் கலந்துகொண்டு மேற்படி நூல்களின் சிறப்பினை எடுத்துக் கூறினார்கள். பெருந்திரளான மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள். மேற்படி நூல் வெளியீட்டுவிழா நிகழ்வின் இறுதியில் பண்டாரவன்னியனின் நாடகமும் அரங்கேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும். Read more