Header image alt text

இன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு-

genevaஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான கூட்டத் தொடரில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன் இலங்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளனர். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர். இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவில் 177 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் அதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இந்த நாடுகள் தொடர்பான மீளாய்வு நடைபெறவுள்ளது. அந்தவகையில் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறும். மேலும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் பிரதிநிதிகளும் சாட்சியமளிக்கவுள்ளனர். மேலும் இலங்கை குறித்து மூன்று சிவில் சமூக நிறுவனங்கள் தமது சமர்ப்பணங்களை இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவுக்கு கையளித்துள்ளன.

3 லட்சம் பேர் வாக்காளர்களாக பதிவுசெய்யவில்லை-மகிந்த தேசப்பிரிய-

mahinda desapriya (3)2016ஆம் ஆண்டில் வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதியான சுமார் 3 லட்சம் இளைஞர், யுவதிகள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

18 முதல் 35 வயதான இந்த இளைஞர் யுவதிகளை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு மற்றும் தேர்தல் கட்டமைப்புக்கான சர்வதேச நிதியம் இணைந்து சமூக வலைத்தள வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வேண்டும் என்றே தம்மை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் சட்டம் ஒன்றை கொண்டு வருவது தொடர்பாகவும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மணி விழா காணும் எங்கள் வித்தியாலயத்திற்கு பாராட்டுக்கள்-

mohanவவுனியா தாண்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள எமது வ.பிரமண்டு வித்தியாலயத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அந்த வகையில் தாண்டிக்குளத்தின் கல்விச் சமூகத்தின் வளர்ச்சிக்காய் அதன் தேவை கருதி 1956ஆம் ஆண்டு உருவாக்கப்படட வித்தியாலயம் வளர்ச்சி மற்றும் சரிவு என பல பரிமாணங்களுடன் தடுப்பு முகாமாகவும் தன்னை சமூகத்திற்காய் அர்ப்பணித்துள்ளது. காலத்தின் பரிணாம வளர்ச்சியில் தன்னையும் மாற்றிக்கொண்டு இன்றும் பல மாணவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக சமூகத்திற்கு மாற்றியமைத்து வழங்குவதையிட்டு பெருமிதம் கொள்வதோடு, கல்வி மட்டுமல்லாது சிறந்த நற்பண்புள்ள பிரஜைகளை இணைப்பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டு மற்றும் சாரணர் இயக்கத்தின் செயற்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆசிரியர் சமூகத்துடன், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் கிராமப்புற பாடசாலைகளின் வளர்ச்சியை மென்மேலும் அதிகரிக்கமுடியும். எனவே மணி விழாவுடன் சிறந்த கடடமைப்பை உருவாக்கி கல்விச் சமூகத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைக்க ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி – புளொட் அமைப்பினருமாகிய நாம் என்றும் உறுதுணையாக இருப்போம்.
திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) முன்னாள் உப நகரபிதா, நகரசபை, வவுனியா.

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து போராட்டம்-

batticaloaமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்றுகாலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து போராட்டம் என்பவற்றில் ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் இகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, கையெழுத்து போராட்டம் ஆரம்பமானது. கலந்துரையாடலில் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தம்மிக முனசிங்க அமைப்பாளர் தென்னே ஞானானந்த தேரோ மாட்ட தலைவர் ரி.கிஸாந்த உட்பட முக்கியஸ்தர்கள் பங்கு கொன்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 ஏப்ரல் மாதம் முதல் பட்டதாரிகளாக வெளியேறிய 1500 பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளதாக சங்க தலைவர் கிஸாந்த் தெரிவித்துள்ளார். கையெழுத்து போராட்டத்தில் பெறப்பட்ட கையொப்பங்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான வேலையற்ற பட்டதாரிகள் இதில் இணைந்து கொண்டிருந்தனர்.

குமாரபுரம் படுகொலை வழக்கினை மீள விசாரிக்குமாறு கோரிக்கை-

kumarapuram1996ம் ஆண்டு திருகோணமலை மூதூர் குமாரபுரத்தில் 26 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரிக்கும் வகையில் சட்டமா அதிபர் ஊடாக மேன்முறையீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996ம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை மூதுரு}ர் குமாரபுரத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் ஆறு பேரும் கடந்த 27 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரித்து தமக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு குமாரபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் செய்திகளை வாசிக்க… Read more

யாழ். கல்விளான் காந்திஜீ சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016-(படங்கள் இணைப்பு)-

kalvilan5யாழ். கல்விளான் காந்திஜீ சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நிகழ்வானது 28.07.2016 அன்று முன்பள்ளியின் தலைவரின் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விளையாட்டுப் போட்டியினை ஆரம்பித்து வைத்தார். இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. Read more

முல்லை. மகளிர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் மாவட்ட பயனாளிகளுக்கும் தையல் இயந்திரம், சமையல் உபகரணங்கள், தளபாடங்கள் அன்பளிப்பு-படங்கள் இணைப்பு-

DSC04458முல்லைத்தீவு மணற்குடியிருப்பு பகுதியில் கிராமிய மீன்பிடி மற்றும் மீன்பிடி அமைச்சின் மூலம் மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் ஊடாக முல்லைத்தீவு பல்வேறு மகளிர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் மாவட்ட பயனாளிகள் சிலருக்கும் தையல் இயந்திரம், சமையல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. மேற்படி நிகழ்வில் கௌரவ மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமைச்சின் செயலாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் (பவன்), துரைராசா ரவிகரன்

மற்றும் மாவட்ட திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அத்துடன் முல்லை மாவட்ட பங்குத்தந்தை மேலும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர் மேலும் இந்நிகழ்வை எழுத்தாளர் புரட்சி தலைமை ஏற்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

வட்டு. இந்து வாலிபர் சங்கம் ஊடாக லண்டன்வாழ் உறவின் தொடர் உதவிகள்-(படங்கள் இணைப்பு)-

vaddduவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்களால் யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த கடந்தகால யுத்தத்தின்போது முற்றாக பார்வையிழந்த செல்வி.அற்புதராஜா அனித்தலா என்பவருக்கு முதற்கட்டமாக ஒரு மாத காலத்திற்க்கு தேவையான ரூபா 10,000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அவர்களது இல்லத்தில் வைத்து இன்று கையளிக்கப்பட்டன. செல்வி.அ.அனித்தலா இறுதி யுத்தத்தின்போது ஒட்டிசுட்டான் பகுதியில்; தனது இரு கண்களையும் இழந்துள்ள இவர் தற்போது புத்தூர் பகுதியில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகின்றார். அண்மையில் இவரது தாயாரினால் எமக்கு தொலைபேசி; மூலம் விடுக்கபட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் மனிதாபிமான கைங்கரியம் இடம்பெற்றது. அவரின் தாயார் தெரிவிக்கும்போது, நான் கணவன் அற்ற நிலையில் முத்த மகனை போராட்டத்தின்போது இழந்து, திருமணமாகாத முற்றாக பார்வையிழந்த எனது மகள் அனித்தலாவும் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட புத்தி சுயாதீனம் குறைந்த மகளும் அவரின் ஐந்து பிள்ளைகளுமாக பல இன்னல்களுடன் வாழ்க்கையை ஓட்டிவருகின்றோம் என்று கூறியதோடு, தாம் அன்றாட உணவுக்குக்கூட கஸ்டபடுவதாகவும் தான் செய்யும் கூலி தொழில்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். Read more

ஆணைக்குழு விசாரணைகளில் கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படவில்லை-

DSC_00661-720x480 (2)காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது எமது கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படாததுடன், எமது கவனத்தை திசைதிருப்பும் முனைப்பிலேயே அவர்கள் செயற்பட்டனர் என காணாமல்போன இளைஞனின் தாயொருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான வலய செயலணி இன்று மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த தாய் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் விசாரணைகளுக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் இன்னும் வீடு திரும்பவில்லை. கடந்த காலங்களில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் நிலவியமையால் இந்த உண்மையை வெளியிட தயங்கினேன். அதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றபோது எமது கருத்துக்களை வழங்க உரியநேரம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி விசாரணைகளை மேற்கொண்டவர்கள், வாழ்வாதாரத்திற்கு ஆடு, மாடு தருவதாகவும், நட்டஈடு தருவதாகவும் கூறி எங்களுடைய கவனத்தை திசை திருப்புவதிலேயே முனைப்பாக செயல்பட்டனர். கடந்த 2008, 2009ம் ஆண்டுகளில் விசாரணைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் எனது மகன் அவ்வாறு கொல்லப்படவில்லை. எனது மகன் எங்கேயோ ஒரு இரகசிய தடுப்பு முகாமில் தற்போதுவரை உயிரோடு இருக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் வடக்கிலேயே அமைக்கப்படவேண்டுமென வலியுறுத்தல்-

DSC_0042காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை களை மேற்கொள்ளும் அலுவலகம் கொழும்பில் அமைக்க கூடாது. அது வடக்கில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் ஒன்றிலேயே அமைக்கப்பட வேண்டும் என மன்னார் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்கான வலய செயலணி இன்று காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த செயலணியானது, நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும், காணாமல்போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக பல வருடங்களாக நீதிமன்றங்களில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் துரிதப்ப டுத்தப்பட வேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆறு மாதங்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன், காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து சர்வதேசத்தின் தலையீட்டுடன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, இவர்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதி குழுவினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும் காணாமல் போனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்க முடியாது எனவும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கக்பட்டதோடு சொத்து இழப்புகளுக்கு மாத்திரமே இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க…. Read more

துணுக்காய், பாண்டியன்குளம் பகுதியில் 20 குடும்பங்களுக்கு மாகாணசபை உறுப்பினர். க.சிவநேசன் உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_0042முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் பகுதிகளைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை வட மாகாணசபை உறுப்பினர். திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் நேற்றுமுன்தினம் (27.07.2016) வழங்கிவைத்துள்ளார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து மேற்படி நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் திரு. சிவபாலசுப்பிரமணியம், துணுக்காய் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட உதவி ஆணையாளர், சமூக ஆர்வலர் தேவா மற்றும் யசோதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

நல்லிணக்கம், பொறுப்புகூறலில் சர்வதேச பங்களிப்பு அவசியம்-ஸ்டீபன் டையன்-

canadaஉள்நாட்டு போரின் பின்விளைவுகள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், உணர்ச்சிபூர்வமான விடயங்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் பொறிமுறைகளில் அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பு அவசியம் என கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டையன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள், நேற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இச்சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கனேடிய அமைச்சர் இவற்றைக் கூறியுள்ளார். இலங்கை மற்றும் கனடாவின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். இலங்கை முன்னெடுத்துள்ள அரசியல் யாப்பு மறுசீரமைப்புக்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதிகளில் சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அதிகளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றை விரைவில் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, நல்லாட்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த கனடா பூரண ஒத்துழைப்பு வழங்கும். அதேவேளை, யுத்தம் காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது-

piyasena former MPதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவி செய்யப்பட்ட அவர் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பீ.எச்.பியசேன பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. கடந்த ஆட்சியின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பிய சேனவுக்கு, பொருளாதார அமைச்சின் கீழ் வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் வண்டி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்று; கைப்பற்றப்பட்டிருந்தது. அரசுக்கு சொந்தமான குறித்த வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து மீண்டும் அரசு பெறுவதற்கு கடந்த வருடங்களில் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அரசு குறிப்பிட்டிருந்தது. எனினும் குறித்த வாகனம் சாரதியுடன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சாரதி நேற்று முன்தினமே சாரதியாக இணைந்து கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்த பியசேன, கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்படி கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூதூரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம்-

volundearsதிருகோணமலை மூதூர் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்றுகாலை இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று மூதூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க….

Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு-

Yஎமது புலம்பெயர் உறவான பிரான்ஸைச் சேர்ந்த உதயகுமார் தர்சினி இன்றைய தினம் தனது தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்கு புதிய துவிச்சக்கரவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின் சிபாரிசின் கீழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக இன்று சங்க தலைமை காரியாலத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தை சேர்ந்த சி.நிரஞ்சிகா மற்றும் வட்டு இந்து கல்லூரியை சேர்ந்த வி.பவாணி ஆகிய இருவருக்கும் இவ் துவிச்சக்கரவண்டிகள் கையளிக்கபட்டன. மேற்படி இரு மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்கும் இவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை தொடர்வதற்கு உதவியாக துவிச்சக்கரவண்டிகள் தந்ததவுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தமது பிள்ளைகள் போன்றும் இவர்களும் கல்வியில் சிறந்து விளங்கி சமூகத்தில் சிறந்த பிரஜையகளாக உருவாக வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் இக் கைங்கரியத்தை தனது தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கி வைத்த உ. தர்சினிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் நன்றிகளை கூறிக்கொள்வதுடன் இவரின் தாயாரான அ.சொர்ணமலர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).
Read more

நல்லிணக்க முயற்சிகளுக்கு கனடா உதவும்-கனேடிய வெளியுறவமைச்சர்-


canadian forign minister met Pஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனேடிய அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையின் நீதிமன்ற முறைமையினை பலப்படுத்தி ஜனநாயத்தை வலுவடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கனேடிய வெளியுறவு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வரா, கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கே.ஏ.ஜவாட், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி விட்டின் உள்ளிட்ட கனடா நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அதீத இராணுவப் பயிற்சியால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கருக்கலைவு-

klhhமன்னார் சன்னார் கிராம பகுதியில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதீத ஆயுதப்பயிற்சியால் அக் கிராமத்திலுள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு, திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான, வலய செயலணி இன்றுகாலை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த செயலணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த, சன்னார் கிராமத்து இளைஞர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரின் பயிற்சி முகாமில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மக்களின் குடியிறுப்பு காணப்படுவதாகவும், இராணுவ பயிற்சி முகாமில் மோட்டார் செல் பயிற்சி, கண்ணிவெடி செயலிழப்பு, கைக்கண்டு பயிற்சி மற்றும் துப்பாக்கி சூட்டு பயிற்சி போன்றவை இடம் பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான பயிற்சி நடவடிக்கைகளின்போதே, பாரியளவிலான அதிர்வுகள் ஏற்படுவதாகவும், இதன் காரணத்தினால் குறித்த கிராமத்திலுள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அறுவரை சந்தேகநபர்களாகப் பெயரிட அனுமதி-

namalநிதி மோசடி சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவரை சந்தேகநபர்களாகப் பெயரிட கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் வழங்கிய தகவலை கருத்தில் கொண்டே கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு ஹேலோ கோப் எனும் நிறுவனத்தின் 45 மில்லியன் ரூபா பெறுமதியான பங்கை பெறுவது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த விசாரணை தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் இந்திக்க பிரபாத் கருணாஜீவ என்பவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்யுமாறு நீதவான் பிடியானை பிறப்பித்துள்ளார்.

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி-(படங்கள் இணைப்பு)-

vavuniya-telo-280716-seithy (1)கொழும்பு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கும் நேற்றையதினம் (27.07.2016) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜீலை 27ம் திகதி திங்கட்கிழமை வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, ஜெகன், தேவன், நடேசுதாசன், சிவபாதம், சிறீக்குமார், குமார், மரியாம்பிள்ளை, குமாரகுலசிங்கம் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 33ஆவது அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தருமான வினோ நோகராதலிங்கம் அவர்களது தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், வைத்தியக்கலாநிதி சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண அமைச்சர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more