Header image alt text

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினுடாக யாழ் இந்துக்கல்லூரி அவுஸ்ரேலியா பழைய மாணவர் சங்கம் கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

B3முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலய மாணவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் மூன்றாம் கட்டமாக கற்றல் உபகரணங்கள் பாடசாலை சீருடைத்துணிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். துணுக்காய் கல்வியத்திற்குட்பட்ட பாடசாலைகளான புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலை மாங்குளம் மாகாவித்தியாலயம் பாண்டியன் குளம் மாகாவித்தியாலயம் சிறாட்டிகுளம் அ.த.க பாடசாலை கல்விளான் அ.த.க பாடசாலை மற்றும் உயிலங்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு 125 புத்தக பைகள் 23 மாணவர்களுக்கான சீருடைத்துணிகள் மற்றும் 7 துவிச்சக்கர வண்டிகள் என்பன யாழ் இந்துக்கல்லூரி ஆவுஸ்ரேலியா பழைய மாணவர்கள் சங்கத்தினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. Read more

நான்கு வெளிநாட்டு தூதுவர்கள் நியமன கடிதங்கள் சமர்ப்பிப்பு-

wrtererஇலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தமது நியமன கடிதங்களை வழங்கியுள்ளனர். மெக்ஸிக்கோ, போர்த்துக்கல், கிரீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல் போன்றே அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தற்போதைய அரசின் கொள்கை என்று ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இலங்கைக்கு வழங்க முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வெளிநாட்டு தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

சங்குப்பிட்டி விபத்தில் இருவர் உயிரிழப்பு-

sfdகிளிநொச்சி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், பொலிஸார் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்றதற்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை எனவும் இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலையாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்ட பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிரவேலு கபில்ராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில், பலத்த காயங்களுக்கு உள்ளாகிய பொலிஸார் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் செய்திகளை வாசிக்க….. Read more