Header image alt text

முன்னாள் பாதுகாப்ப செயலர் கோட்டாபய மற்றும் 7பேருக்கு எதிராக வழக்கு-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழ்வருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷவுடன், நிஸங்க யாப்பா சேனாதிபதி, முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் ஜயனாத் கொழம்பகே, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சுஜாதா தமயந்தி ஜெயரத்ன, மேஜர் ஜெனரல் பாலித பியசிறி பிரணாந்து, மேஜர் ஜெனரல் கருணாரத்ன ஏகொடவெல மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் ஜயந்த பெரேரா ஆகியோரே இணைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்கு அனுமதியளித்தமை மற்றும் அதன்மூலம் எவன்காட் நிறுவனத்திற்கு 11.4 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட வாய்ப்பை வழங்கியமை தொடர்பிலயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் கீ மூன் இலங்கை வருகை-

dsfggfஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நாட்டை வந்தடைந்துள்ளார். கொரியாவுக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட குழுவினர் விமான நிலையம் சென்று பான் கீ மூனை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த விஜயத்தின்போது பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ள அவர் அங்குள்ள நலன்புரி முகாம்களிலுள்ள மக்களையும் சந்திக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து பான் கீ மூன் லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் விஷேட உரையாற்றவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

முன்னாள் போராளி வெள்ளைவேனில் வந்தவர்களால் கைது-

white vanகிளிநொச்சியில் நேற்று பிற்பகல் 3 மணியவில் ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து, முன்னாள் போராளி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் பின்புறமாக விளங்கிட்டு கைதுசெய்யப்பட்டு, வானில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி – தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் (வயது 26) என்பரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன், நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த நிலையில், நேற்று வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்களால், கைகதுசெய்யப்பட்டு வானில் ஏற்றிச்செல்லப்பாட்டுள்ளார். இது தொடர்பில் கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வித நடைமுறைகளுமின்றி இக்கைது இடம்பெற்றிருப்பதால், அப்பகுதி மக்களிடையே இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை தனது மகனை அடித்து விலங்கிட்டு அழைத்துச் சென்றதாகவும், எத்தனையோ இடங்களுக்கு அலைந்து திரிந்தும் இதுவரை தனது மகனைக் காட்டவில்லை எனவும் மோகனசீலன் நிசாந்தனின் தாய் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அகதி முகாமிலுள்ள 450 குடும்பங்களுக்கு காணிகள் வழங்க தீர்மானம்-

sfdfdfவடக்கில் அகதி முகாமிலுள்ள 450 குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம் குடும்பமொன்றுக்கு தலா 20 பேர்ச்சஸ் காணி வழங்கபடவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

வடக்கில் தற்போது 34 அகதி முகாம்கள் உள்ளதுடன் 971 குடும்பங்கள் தங்கியுள்ளனர். மேலும் காணிகள் வழங்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கமே முன்னெடுக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் உதவியையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்தா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெருமளவு தங்கத்துடன் இருவர் கைது-

gold (2)ஐந்தரை கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாம் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, இந்திய – இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நேற்றிரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மாதகல் மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தகவல்கள் கூறுகின்றன.

மாணவர் ஒன்றிய எதிர்ப்புப் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்-

kanneer pukaiஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள்மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன நியமனம்-

sl armyஇராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ பேச்சாளராக இதுவரை, பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர் கடமையாற்றி வந்த நிலையில் புதிய பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்திருந்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியிருந்தார். அவர் தனது மேலதிக கல்வியை தொடர வெளிநாடு செல்ல இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் எனட் டிக்ஷன் சந்திப்பு-

ddஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உதவித் தலைவர் எனட் டிக்ஷன் தலமையிலான அதிகாரிகள் குழு, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இச் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், நெல்சிப் திட்டத்தின் 2ம் பகுதி தொடர்பாகவும், விவசாயத்துறை நவீன மயப்படுத்தல் தொடர்பாகவும், மூலோபாய நகரங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராய்வதற்காகவே அவர்கள் வருகை தந்திருந்தனர். இதன்போது யாழ். நகரத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும், விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம். விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாக பேசுகையில், குறிப்பாக நாங்கள் வழக்கத்தின் அடிப்படையில் சில விவசாய நடவடிக்கைகளுக்கான சில முறைகளை கையாண்டு வருகின்றோம். ஆனால் வியாபார நோக்கம், காலநிலை, நிலத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சில மாறுதல்களை மேற்கொள்ளலாம். அவை தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம். இதேவேளை வடமாகாணத்தில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டுமான வசதிகள் தொடர்பாக உலகவங்கி உதவிகளை வழங்கும். என கூறியிருக்கின்றார்கள். அதனை நாங்கள் வரவேற்றிருக்கின்றோம். மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அவ்வாறான உதவிகள் நிச்சயமாக தேவை என்பதையும் நாங்கள் வலியுறுத்தி கேட்டிருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இணையத்தளத்தில் ஊடுருவிய இருவர்-

hackerஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17வயது மாணவன் சிறுவர் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பில் கைதான 26வயது இளைஞர் எதிர்வரும் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றுபகல் மேற்படி இருவரும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மாணவர் கடுகண்ணாவ பகுதியில் வைத்து நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டிருந்ததோடு, இரண்டாமவரான இளைஞர் மொரட்டுவையில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் முடக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனட் டிக்சன் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம் மக்கள் சந்திப்பு-

sss (2)யாழ். குடாநாட்டுக்கு நேற்றையதினம் சென்றிருந்த உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் எனட் டிக்சன் தலைமையிலான குழுவினர், மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமுக்கு விஜயம்செய்து, அங்கிருந்த மக்களை சந்தித்துள்ளனர். இதன்போது அம் மக்களுடைய வாழ்க்கைத் தரம், உட்கட்டுமான வசதிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன், மக்களின் பிரச்சினைகளை மக்களிடமே நேரடியாக கேட்டு அறிந்து கொண்டனர். இச் சந்தர்ப்பத்தில், 27 வருடங்களாக பல்வேறு விதமான அவலங்களுக்கு மத்தியில் நிரந்தர தொழில் மற்றும் வாழ்வாதார உதவிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக மக்கள் உலக வங்கியின் அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளனர். அத்துடன், தங்களுடைய நிலங்களை மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்குமாறும், பருவமழை ஆரம்பிக்கும் நிலையில் மழை வெள்ளத்தினால் வருடாந்தம் ஏற்படும் பாதிப்புக்களுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர். மேலும், தம்மை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கும்படியும் குறித்த மக்கள், வருகைதந்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் மக்களுடைய கருத்துக்களுக்கு பதிலளித்த எனட் டிக்சன் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர், உலக வங்கி வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டுமான உதவிகளை வழங்கும் என்றார்.

அரச அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து தப்பிச்சென்ற புலி உறுப்பினர்கள்-

mangala_samaraweeraயுத்தம் நிறைவடைந்த சில வாரங்களில் சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், எனினும் அவ்வாறு சென்றவர்கள் காணாமல் போயுள்ளோர் பட்டியலில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அவர்கள் குறித்தும் ஆராயவேண்டும் எனவும், அதற்கு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது குறித்த சட்டத்தில் இடமுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பிலான தற்போதைய நிலைமைகள் குறித்து வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில், வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மங்கள சமரவீர இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை குறித்த அலுவலகம் தொடர்பில் சிலர் மக்களுக்கு தவறான கருத்துக்களை கொண்டு செல்வதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட சில திருத்தங்களையும் அதில் உள்ளடக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு நீதிமன்றத்துக்கான அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் அதன் பரிந்துரைகள் இலங்கை சட்டத்தின் படியே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வடக்கில் பேரணி-

1472540423_download (1)வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதிப் பொறிமுறைகளே அவசியம் என, வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று வடக்கில் மாபெரும் பேரணியினை முன்னெடுத்திருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கம் மற்றும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சார்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களும், பொதுமக்களும் சமூக நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் தமது கோரிக்கைகளை ஏகோபித்த குரலில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள். யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றுகாலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வதிவிட காரியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. பேரணியின் நிறைவில், ஐ.நா சபையின் வதிவிட காரியாலயத்தில் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். தேசிய நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணிக்கு ஓர் பகிரங்க சமர்ப்பித்தலையும் அவர்கள் வழங்கியதுடன், அந்த மகஜரின் பிரதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கும் அனுப்பி வைத்தனர். அந்த மகஜரில், Read more

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகம் வடக்கிலும் நிறுவவேண்டும்-வடக்கு முதல்வர்-

vigneswaranவெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவினால், அங்குள்ள மக்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமென்றும், இது குறித்து துறைசார் அமைச்சர் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்ட, ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கான தேவைகளை உடைய பொதுமக்களுக்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதலுக்குமான நடமாடும் சேவை நேற்று நல்லூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நல்லூர் உற்சவம் நடைபெறும் இவ்வாறான சனக்கூட்டம் நிறைந்த தினங்களில் நடாத்தப்படுகின்ற நடமாடும் சேவையும் அதன் வழிகாட்டி அறிவுறுத்தல்களும் கூடுதலான மக்களுக்கு போய்ச்சேரும் என்பதில் ஐயமில்லை. கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது இளைஞர்கள் யுவதிகளில் பலர் வெளிநாடுகளில் குடியேறி வாழ்கின்றனர். Read more

வவுனியாவில் மேலும் துப்பாக்கிகள் மீட்பு-

arms vavuniyaவவுனியா ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் 38 மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்குமார இன்று தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றினை சுத்தம் செய்த போது அதில் புதையுண்ட நிலையில் துப்பாக்கிகள் இருப்பதைக் கண்ட காணி உரிமையாளர் ஓமந்தைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஓமந்தை பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் 30 எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் எனக் கருதிய பொலிஸார் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட வவுனியா நீதிமன்றின் அனுமதியைக் கோரியிருந்தனர். வவுனியா நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து வவுனியா நீதிமன்ற பதிவாளர் எம்.எஸ்.அமரட்ண முன்னிலையில் இன்றுகாலை விசேட அதிரடிப்படையினரால் மீண்டும் தோண்டும் பணிகள் இடம்பெற்றது. இதன்போது 8எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் மீட்கப்பட்டது. இவ்வாறாக இவ்விடத்தில் இருந்து 38எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ஓமந்தை பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் முன்னர் இராணுவ முன்னரங்க காவல் நிலைகள் இருந்தன. இதேவேளை, வவுனியா, ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியிலிருந்து 3 கிலோ எடைகொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

நாடு பிளவுபடுவதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் – இரா.சம்பந்தன்-

sampanthan_maithripalaஅதிகாரங்களை பகிரும் போதும், நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாத்தறை கூட்டுறவு துறைசார் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடும் புரிந்துணர்வோடும் செயலாற்ற வேண்டும். எதிர்காலத்தில் விவசாயம், கைத்தொழில் மற்றும் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன். யுத்தம் முடிவடைந்ததால் இப்போது மீதமிருப்பது அபிவிருத்தி மட்டுமே. தமிழ் தேசிய தலைவர் என்ற வகையில் நாடு பிளவுபடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என உறுதிமொழி வழங்குகின்றேன். முப்படைகள், நிதி முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு நடவடிக்கைகளும் மத்திய அரசின்கீழ் செயற்பட வேண்டும். மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் மாகாண நிர்வாகத்தின்மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதால் அடுத்துவரும் 10வருட காலத்திற்குள் இலங்கையை சிங்கபூர் போன்ற நாடாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உண்டு என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக மனுத் தாக்கல்-

courtsஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் செயற்படுத்தத் தவறியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி வழக்கறிஞர் ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் இது குறித்த அடிப்படை உரிமை மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை முன் அனுமதியின்றி பார்க்கமுடியும் என, ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை தான் சந்திக்க அனுமதி கோரி 30 நாட்களுக்கும் மேலாகின்றது எனவும், ஆனால் இதுவரை அனுமதி கிட்டவில்லை எனவும் மனுதாரர் நீதிமன்றத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை, மொஹமட் முசமில் ஆஜர்-

kumara welgamaமுன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்றுகாலை பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்காக நாராஹேன்பிட்ட சாலிகா மைதானத்தை பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவர் ஆஜாராகியிருந்தார்.

இதேவேளை தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசமில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியிருந்தார். முசமில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருந்தபோது இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் ஆஜாராகியிருந்தார்.

உலகவங்கியின் தெற்காசிய உபதலைவர் இலங்கைக்கு விஜயம்-

world bankஉலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவரான எனட் டிக்சன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு மூன்றாவது முறையாக தற்போது விஜயம் செய்வதாக, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதன்படி இன்று நாட்டிற்கு வந்துள்ள எனட் டிக்சன் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். மேலும், வடக்கில் மேற்கொள்ளப்படும் சில வேலைத் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.

தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரையும், பரிசளிப்பும், நூல் வெளியீடும்-(படங்கள் இணைப்பு)

 தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரையும், பரிசளிப்பும், நூல் வெளியீடும் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் 27.08.2016 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் புளொட் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர் கௌரவிப்பினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூடல், தமிழ்த்தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன. வரவேற்புரையினை செ.சிவசுப்பிரமணியம் அவர்களும், தலைமையுரையினை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் நிகழ்த்தினார்கள். Read more

சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்-
tna (4)வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்றங்களை கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழு, பிரதமரை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் தீய நோக்கங்களையும், இன ரீதியான பதற்றங்களையும் உருவாக்கும் நோக்கில் இடம்பெறும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதன்போது சுட்டிக்காட்டியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களுக்கான தகுதிபெற்றிருந்தும் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படாமை குறித்தும் இதன்போது பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும், சிங்கள மக்கள் வடக்கிலே மீளக்குடியேறுவதையும் அங்கே தமது மதத்தினையும் கலாச்சாரத்தினையும் பின்பற்றுவதை வரவேற்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இனரீதியான பதற்றத்தை தூண்டும் விதத்திலும், வடக்கு கிழக்கிலே சனத்தொகை பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினால் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் குந்தகத்தை ஏற்படுத்தும் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேற்றைய சந்திப்பின் போது பிரதமர் உறுதியளித்ததாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அணிமீது தாக்குதல் நடாத்திய ஆயுததாரிகளில் நால்வர் சுட்டுக்கொலை-

cricket team attachedபாகிஸ்தானில் வைத்து 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிமீது தாக்குதல் நடத்திய ஆயுததாரிகளில் 4 பேர் இன்று அதிகாலையில் அந்நாட்டு பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். மனாவ என்ற பிரதேசத்தில் பொலிஸாருக்கும் – ஆயுததாரிகளுக்கும் இடம்பெற்ற மோதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் ஈ ஜாங்வி (டுயளாமயச-ந-தூயபெஎi) அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். 7 ஆயுததாரிகள் பொலிஸாருடன் மோதியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்கள் சுபைர் அலைஸ் நைக் முகமட், அப்துல் வகாப், அர்ஷாட் மற்றும் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது, லாகூர் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மற்றும் 2008ம் ஆண்டு லாகூர்மூன் மார்க்கெட்மீதான தாக்குதல் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக, தி ஹிந்து தெரிவித்துள்ளது

யாழில் நடமாடும் சேவை அமைச்சர் மங்களவால் ஆரம்பித்து வைப்பு-

nallurகொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடமாடும் சேவையினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று யாழில் ஆரம்பித்து வைத்தார். வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக பருத்துத்துறை வீதியில் இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். வடமாகாண மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த நடமாடும் சேவையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் பங்குபற்றி இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால், வழங்கப்படும் சர்வதேச தேவைகளுக்காக ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதற்கான தேவைகளை உடைய பொதுமக்களுக்கான ஆலோசனைகளும் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் பிறப்பு, விவாகம் மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல், கடவுச்சீட்டு சம்பந்தமான வழிகாட்டல்கள், பல்வேறு கொன்சியுலர் அலுவல்கள், இரட்டை பிரஜாவுரிமை மற்றம் குடியுரிமை பெறுதலுக்குரிய நடவடிக்கைகள் என்பன பற்றிய விழிப்புணர்வுகளையும் சேவைகளையும் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை நலன்புரி முகாம்களிலுள்ளவர்களுக்கு விரைவில் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நலன்புரி முகாம்கள் சிலவற்றுக்கு இன்று விஜயம் செய்தவேளையில் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை கருத்தில் கொள்ளாத வீடமைப்பு திட்டங்கள்-

housing schmeவடக்கு-கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் வழங்கப்படுகின்ற வீடுகளில் தங்களின் தேவைகள் பற்றி கவனம் செலுத்தப்படுவதில்லை என போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். போருக்குப் பின்னர் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற அமைப்புகளினாலும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தவிர இந்தியா மற்றும் ஐரோப்பிய யுனியன் உதவி வீடுகளும் அரசாங்கத்தின் தெரிவு ஊடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிடைத்துள்ளன. இந்த வீடுகளை பொறுத்தவரை கழிப்பறை, வீட்டு நுழைவாயில் உட்பட மாற்றுக் திறனாளிகளுக்குரிய அணுகும் வசதிகளை கொண்டதாக இல்லை. கிழக்கு மாகாணத்தில் தற்போது நடைபெற்று வரும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகளிலும் இவ்விடயம் மாற்றுத் திறனாளிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளியொருவரை கொண்டுள்ள குடும்பத்திற்கு கிடைக்கும் வீடு அவருக்கு ஏற்ற வசதிகளை கொண்டதாகவே இருக்க வேண்டும் என கட்டைப்பறிச்சானை சேர்ந்த முன்னாள் புலிகள் இயக்க போராளியான கவிதா சீவரெத்தினம் வலியுறுத்தினார். Read more

tea_estateஇலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 10 மாதங்களுக்கு பின்னர் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னரும் எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது.

கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்கள், முதலாளிகள் சம்மேளனம் மற்றும் தோட்ட நிர்வாகங்களுக்கு இடையிலான இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் இன்று நடைபெற்றது. Read more

Anandiவடமாகாணத்தில் காணாமால் போனவர்களின் உறவுகளுக்காக வடமாகாண சங்கம் ஒன்றை அமைக்க மூன்றுபேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதில் வடமாகாண விவசாய, கமநலசேவைகள், நீர்ப்பாசன துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபையின் உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் அடங்குகின்றனர். Read more

missingகாணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கூறி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். Read more

ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைவரவுள்ளார்

pan ki munஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் பான் கீ மூன் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் ஜனாதிபதி, பிரதமர் உட்பட மற்றும் பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் காலி உள்ளிட்ட நாட்டின் சில் பிரதேசங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

ரிஷாத் பதியுதீனிடம் விசாரணை; ஜனாதிபதி ஆணைக்குழு
 
rishad badyudeenகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

சதொச நிறுவனத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

தற்போது சதொச நிறுவனத்திற்கு பொறுப்பான அமைச்சராக ரிஷாத் பதியுதீன் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் சுகாதார அமைச்சு

Healthஉணவு பாதுகாப்பு வாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மூலம் நுகர்வுக்கு தகுதியில்லாத உணவுகளை ஆகார வகைகளை விற்பனை செய்த 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கடந்த 22ம் திகதி ஆரம்பமான உணவு பாதுகாப்பு வாரத்தின் நான்காவது நாளான நேற்று (25) வரை 12,275 வர்த்தக நிலையங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித நுகர்வுக்கு தகுதியற்ற 10,824 வகையான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்பு வாரம் வரும் 29ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதுடன் 1800 பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு பூராகவும் இதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

chennai_high_courtதமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல். சோமையாஜி ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

2013-ஆம் ஆண்டில் நவநீதகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஏ.எல். சோமையாஜி நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், அவர் தனது பதவியை வெள்ளிக்கிழமையன்று ராஜினாமா செய்தார்.

அவருக்குப் பதிலாக புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமியை ஆளுநர் நியமித்திருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

மும்பையின் பிரபல தர்காவில் புனித சமாதிக்குள் பெண்கள் நுழைவதற்கான தடை ரத்து
 
muslim_womenமும்பையில் உள்ள பிரபல ஹாஜி அலி தர்காவில் புனித சமாதிக்குள் பெண்கள் நுழைய கூடாது என்ற தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஹாஜி அலி தர்கா வழிபட்டு தலத்தில் உள்ள தடையானது பெண்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், அரசியல் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தடை கொண்டுவரபட்டது. ஆண் துறவிகளின் சமாதியை பெண்கள் தொட அனுமதிப்பது ‘கடுமையான பாவம்’என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஹாஜி அலி தர்கா 15ஆம் நுற்றாண்டின் சூபி மத வழிபாட்டுத்தலம் ஆகும். இந்த தலத்தை நடத்திவரும் அறக்கட்டளை, மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

சமீப மாதங்களில் இந்தியாவில் பெண்கள் நுழைவதை தடை செய்யும் இந்து மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்கள் எதிர்பாராத சட்ட சவால்களை சந்தித்து வருகின்றன.