ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற சந்திரிக்கா உதவ வேண்டும்!வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் Read more
Posted by plotenewseditor on 11 August 2016
Posted in செய்திகள்
ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற சந்திரிக்கா உதவ வேண்டும்!வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் Read more
Posted by plotenewseditor on 11 August 2016
Posted in செய்திகள்
கடத்தலுக்கும் கடல் பாதுகாப்பு துறையினருக்கும் தொடர்பு இருக்கிறதா?- வடமாகாணமுதலமைச்சர்
கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் பாதுகாப்பு துறையினருக்கும் இடையில் ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா? என்பதுடன், அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா? என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
மாகாண மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 11 August 2016
Posted in செய்திகள்
அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை இம் மாதம் 22-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், ஜாமீன் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை சசிகலா புஷ்பா அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 1-ம் தேதி, சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கி அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டார். Read more
Posted by plotenewseditor on 11 August 2016
Posted in செய்திகள்
மூன்று ஆண்டுகளில் 187 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
இலங்கையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த 187 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றம் கூடிய போது, கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர் ஜயந்த சமரவிர எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய அமைச்சர் கயந்த கருனாத்திலக இதனை தெரிவித்தார்.
சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நீதி அமைச்சரினால் ஓய்வுபெற்ற உச்சமன்ற நீதிபதிகள் இருவரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய 2015-ஆம் ஆண்டு 117 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கருனாத்திலக, 2016-ஆ ம் ஆண்டில் இதுவரை 70 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
1.36 டிர்லியன் ரூபா வெளிநாட்டுக் கணக்குகளில் மறைத்து வைப்பு
கடந்த ஆட்சிக் காலத்தில் குறைந்தபட்சம் 1.36 டிர்லியன் ரூபா பணம் வெளிநாடுகளிலுள்ள, அரை அரச நிறுவனங்களின் கணக்குகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த கடன் தொகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவால், நேற்று சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். Read more