Header image alt text

வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 27 வது வீரமக்கள் தினம்.! (படங்கள் இணைப்பு)-

2b89e6b0-1eb2-4102-ad3b-dd4966f98fb7புளொட் அமைப்பினால் வருடாந்தம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் வீர மக்கள் தின நிகழ்வுகளின் இறுதி நிகழ்வு 16.07.2016 சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இடம்பெற்றது. புளொட் அமைப்பின் கௌரவ தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ச்சியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாக செயலாளர் தோழர் எம்.பற்றிக் அவர்களின் நெறிப்படுத்தலில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை அடுத்து கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் திரு சு.சதானந்தன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் திரு க.சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், ஓய்வுபெற்ற அதிபர் திரு.சிவசோதி, கழகத்தின் உப தலைவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கழகத்தின் உப தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு வை.பாலச்சந்திரன், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ராகவன், தேசிய அமைப்பாளர் த.யோகராஜா, கழக பொருளாளர் இளங்கோ, முன்னாள் சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் அன்ரன் பொன்னையா, மகளிர் அணியைச் சேர்ந்த தோழர் ஜெஸ்மின், செயற்குழு உறுப்பினர்களான செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் தோழர் குகதாசன், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (சிவம்), Read more

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வலி மேற்கில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-

P1140273தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் 27 ஆவது வீரமக்கள்; தினம் கடந்த 13.07.2016 அன்று முதல் 16.07.2016 வரையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வீரமக்கள் தினத்தின் இரண்டாம் நாள் நிகழ்வானது வலி மேற்குப் பிரதேசத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டைக் கிளையினால் பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு நினைவுகூரப்பட்டது. இவ் நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டதுடன் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தார். இவ் நிகழ்வில் கழகத்தின் நோர்வே கிளையின் அமைப்பாளர் திரு.ராஜன், கழகத்தின் வட்டுக்கோட்டை உறுப்பினர் தோழர் சின்னக்குமார் மற்றும் பல தோழர்களும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். Read more

மக்களை நேசித்து மரணத்தை தழுவிக்கொண்ட முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் வசந்தன் அவர்களுக்கு அஞ்சலி-(படங்கள் இணைப்பு)-

IMG_333927வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னாள் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமீழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மூத்த உறுப்பினருமான தோழர் ச.சண்முகநாதன்(வசந்தன்) அவர்களுக்கு வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியில் மறைந்த 18ஆவது நினைவு தினமான 15.07.2016 அன்று அவர்களை நினைவுகூரும் முகமாக விளக்கேற்றி, மலர்மாலைகள் அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவருடன் மறைந்த அவரது புதல்வர் ச.வக்சலன் அவர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்விலே தோழர் வசந்தனின் அன்புத் தாயார், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், ஈரோஸ் அமைப்பின் தலைவரும், தோழர் வசந்தனின் சகோதரருமான திரு. ச.துஸ்யந்தன், Read more

பெற்றோர், ஆசிரியர், மாணவர்களின் சமூகமயமாதலே எமது சமூகத்தின் வெற்றி-திரு க.சந்திரகுலசிங்கம்-(படங்கள் இணைப்பு)-

IMG_3532பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடையே சிறந்த தொடர்பு முறை முன்பள்ளி முதல் உயர்தரம் வரை சிறப்பாக இருத்தலின் ஊடாகவே எமது சமூகத்தின் கல்வியில் பாரிய மாற்றத்தை தற்காலத்தில் மேற்கொள்ள முடியும் என வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவும், புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் வவுனியா அருணோதய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் (16.07.2016) நேற்று உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தின் தேவை கருதி சிறந்த முறையில் ஆசிரிய வளங்களுடன் செயலாற்ற வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது. மாணவர்கள் மீது அதிக அக்கறையினை பெற்றோர்களுடன் ஆசிரியர்களும் காட்ட வேண்டும். காலத்தின் போக்கில் மாணவர்களின் எண்ணங்கள் மாற்றமடைவதனால் அவர்களின் செயற்பாடுகள் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு இல்லையெனில் பாதைமாறிப்போகும். Read more

வலி மேற்கில் வீரமக்கள் தினம்-(படங்கள் இணைப்பு)

P1140251வலி மேற்கு பிரதேசத்தில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டை தொகுதியின் கிளையினால் மேற்கொள்ளப்பட்டது. அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது மேற்படி நினைவுநாள் நிகழ்வானது 13ஆம் திகதியன்று நாள் வலக்கம்பறை பொதுஅரங்கில் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் திருமதி. நாச்சியார். செல்வநாயகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் மா.உதயசூரியன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நோர்வே கிளை அமைப்பாளர் ராஜன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் கௌதமன், மதகுரு அன்ரனி அடிகளார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டை தோழர் சின்னக்குமார், கழகத்தின் தோழர் கிருஸ்ணன் போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் அமரரது படத்திற்கு அஞ்சலி செய்யப்பட்டதுடன். அகவிழக்கும் ஏற்றப்பட்டது. Read more