Header image alt text

ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016-(படங்கள் இணைப்பு)-

P2யாழ். ஆனைக்கோட்டை உயிரப்புலம் ஐக்கிய சனசமூக நிலைய அடைக்கலநாயகி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2016 நேற்றையதினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. முன்பள்ளியின் தலைவர் பரஞ்சோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, கௌரவ விருந்தினர்களாக வலி தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் சற்குணராஜா, ஆர்.கே. ரட்ணராஜா ஆகியோரும், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக புனித அடைக்கலநாயகி தேவாலய பங்குத்தந்தை, அருட்சகோதரி புனிதராணி, நவலட்சுமி சந்திரகுமார் (அதிபர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன. Read more

துளிசிகனின் இரத்த சாசனம் குறும்படம் வெளியீட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-

Kurumpadam 24.07.2016 (1)உ.துளசிகனின் இரத்தசாசனம் என்னும் குறும் திரைப்படம் வெளியீட்டு நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. யாழ். வலிகாமம் தென்மேற்கு குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி தெற்கு பிரதேச செயலக அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், வட மாகாண பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து மேற்படி குறும் திரைப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டது. Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல சிறார்களுக்கு காலணிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

l1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த குழந்தைச்செல்வம் த.அர்ச்சனா அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பார்வையிழந்த செவிப்புலன் இழந்த வாய்பேச முடியாத மாணவர்களை பராமரிக்கும் இல்லமான இனிய வாழ்வு இல்லத்தைச் சேர்ந்த 49 சிறார்களுக்கு காலணிகளை வழங்கிவைத்துள்ளார். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் இனிய வாழ்வு சிறார்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக 21.07.2016 அன்று இப் பொருட்கள் மாணவர்களிடம் கையளிக்கபட்டுள்ளது. இந் நிகழ்வில் குழந்தை அர்ச்சனாவை மகிழ்விக்கும் முகமாக இனிய வாழ்வு இல்ல சிறார்களினால் பல நாட்டியம் மற்றும் கண்பார்வையிழந்த செல்வி.தமிழினியின் இனிய குரலில் பாடலும் இடம்பெற்றது. இக் கைங்கரியத்தை ஆற்றிய குழந்தை செல்வம் அர்ச்சனா சீரோடும் சிறப்போடும் பல்லாண்டுகாலம் பல கலைகளும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை பிராத்திப்பதோடு Read more

வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம்-கனடா-

cafsஉண்மையான அமைதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்குமென கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார். “கனேடிய தமிழர்களுடன் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகம் நினைவுகூரும், 1983 கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வுகளில் கனடாவும் இணைந்து கொள்கிறது. தமிழர்களுக்கு எதிரான கலவரங்களின் போதும், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போதும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அதேவேளை, தமது குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்களுக்கு எமது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையான அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் நீதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்தை கனடா தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்றும் கனேடியப் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிபதிகள் விடயத்தில் மாற்றமில்லை-ஐரோப்பிய ஒன்றியம்-

europ1இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான உள்ளக விசாரணைக்கு, சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தப் போவதில்லையென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த செய்தியை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது. இருதரப்பினராலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஐ.நா ஆணையாளரின் இலங்கை தொடர்பான யோசனைக்கு ஏலவே ஆதரவு வழங்கியிருந்ததாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான நிர்வாகி போல் கோட்பிரே, அதனடிப்படையில் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், விசாரணை பொறிமுறை குறித்த இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் போல் கோட்ப்ரே தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும்-எம்.கே.சிவாஜிலிங்கம்-

sivajiதமிழினப் படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டுமென, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் கடந்த 1983ல் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டதாக 53 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்டோரை நினைவுகூரும் வகையில், இன்றையதினம் தமிழ் தேசிய வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றுகாலை நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நினைவுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியபின், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். அத்தோடு, தமிழ் மக்களுக்கு தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையில் ஓர் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமென இதன்போது குறிப்பிட்ட அவர், அதனை வெற்றிகொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும் செய்திகளை வாசிக்க….. Read more