Header image alt text

லண்டனில் கறுப்பு ஜூலையில் 27ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-(படங்கள் முழுமையாக இணைப்பு)-

13702344_1774076416170694_1011690158_oதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கழகக் கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி லண்டனின் New ham Town Hall, Barking Road, Eastham,  London, E6 2RP என்ற முகவரியில் அமைந்துள்ள ஈஸ்ட்காம் நகர மண்டபத்தில் 27ஆவது வீரமக்கள் தினம் கடந்த (17.07.2016) ஞாயிறுக்கிழமை மாலை 5.10 மணியளவில் லண்டன் தோழர் நடாமோகன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. நிகழ்வின் தலைமையுரையினை லண்டன் ஈஸ்த்ஹாம் உப நகரபிதா போல் சத்தியநேசன் அவர்கள் நிகழ்த்தினார். “ஒன்றாய் இன்றும் நாமில்லையேல் விடுதலை என்றும் நமக்கில்லை” என்ற வாசகத்தை முன்நிறுத்தி மறைந்த அனைத்து இயக்க போராளிகளையும் வணங்கி “கறுப்பு ஜூலையில்” வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு நினைவுகூரப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச் சுடரினை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ரிம்ஸ் அவர்கள் ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மௌன அஞ்சலி இடம்பெற்றது. Read more

தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல்-

faiser mustafaஅடுத்த வருட தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுமென, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அமைச்சில் அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். எல்லை மீள்நிர்ணய நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில், தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதெனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில, விரைவில் குறித்த நடவடிக்கை பூர்த்திசெய்யப்பட்டு, தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, இரண்டு, மூன்று மாடிகளை கட்டுவதற்கு அனுமதியை பெற்றுவிட்டு, அதற்கு அதிகமான மாடிகளைக் கொண்ட கட்டிடங்கள் அமைப்பவர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.   …மேலும் செய்திகளை வாசிக்க……
Read more