எட்கா ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இணக்கம்-
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழிநுட்ப கூட்டுறவு ஒப்பந்தம் (நுவுஊயு) குறித்து, பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும் அதனை இவ் வருடத்துக்குள் நிறைவு செய்யவும், இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு இடையில், டெல்லியில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு இந்தியக்குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வவுனியா ஓர்கன் புதுவாழ்வு பூங்கா மாணவர்களுக்கு விசேட உணவு வழங்கல்.!(படங்கள் இணைப்பு)-
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் இவ் விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு 04.03.2016 திங்கட்கிழமை கூமாங்குளத்தில் அமைந்துள்ள ஓர்கன் புதுவாழ்வு பூங்காவில் நடைபெற்றது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்திய கிழக்கு நாடுகளின் இணைப்பாளர்களில் ஒருவரான தோழர் குணா அவர்களின் ஊடாக இவ் விசேட உணவு வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) சிரேஷ்ட உறுப்பினர் திரு. முத்தையா கண்ணதாசன், அதன் மத்தியகுழு இளைஞரணி செயற்பாட்டாளர் திரு சு.காண்டீபன், அதன் பின்லாந்து இணைப்பாளர் சந்துரு மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பொருளாளர் திரு த.நிகேதன், அதன் அமைப்பாளர் திரு வ.பிரதீபன் மற்றும் ஓர்கன் புதுவாழ்வு பூங்காவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Read more