இன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு-

genevaஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான கூட்டத் தொடரில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன் இலங்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளனர். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர். இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவில் 177 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் அதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இந்த நாடுகள் தொடர்பான மீளாய்வு நடைபெறவுள்ளது. அந்தவகையில் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறும். மேலும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் பிரதிநிதிகளும் சாட்சியமளிக்கவுள்ளனர். மேலும் இலங்கை குறித்து மூன்று சிவில் சமூக நிறுவனங்கள் தமது சமர்ப்பணங்களை இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவுக்கு கையளித்துள்ளன.

3 லட்சம் பேர் வாக்காளர்களாக பதிவுசெய்யவில்லை-மகிந்த தேசப்பிரிய-

mahinda desapriya (3)2016ஆம் ஆண்டில் வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதியான சுமார் 3 லட்சம் இளைஞர், யுவதிகள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

18 முதல் 35 வயதான இந்த இளைஞர் யுவதிகளை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு மற்றும் தேர்தல் கட்டமைப்புக்கான சர்வதேச நிதியம் இணைந்து சமூக வலைத்தள வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வேண்டும் என்றே தம்மை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாதவர்கள் தொடர்பில் சட்டம் ஒன்றை கொண்டு வருவது தொடர்பாகவும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மணி விழா காணும் எங்கள் வித்தியாலயத்திற்கு பாராட்டுக்கள்-

mohanவவுனியா தாண்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள எமது வ.பிரமண்டு வித்தியாலயத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அந்த வகையில் தாண்டிக்குளத்தின் கல்விச் சமூகத்தின் வளர்ச்சிக்காய் அதன் தேவை கருதி 1956ஆம் ஆண்டு உருவாக்கப்படட வித்தியாலயம் வளர்ச்சி மற்றும் சரிவு என பல பரிமாணங்களுடன் தடுப்பு முகாமாகவும் தன்னை சமூகத்திற்காய் அர்ப்பணித்துள்ளது. காலத்தின் பரிணாம வளர்ச்சியில் தன்னையும் மாற்றிக்கொண்டு இன்றும் பல மாணவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக சமூகத்திற்கு மாற்றியமைத்து வழங்குவதையிட்டு பெருமிதம் கொள்வதோடு, கல்வி மட்டுமல்லாது சிறந்த நற்பண்புள்ள பிரஜைகளை இணைப்பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டு மற்றும் சாரணர் இயக்கத்தின் செயற்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆசிரியர் சமூகத்துடன், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் கிராமப்புற பாடசாலைகளின் வளர்ச்சியை மென்மேலும் அதிகரிக்கமுடியும். எனவே மணி விழாவுடன் சிறந்த கடடமைப்பை உருவாக்கி கல்விச் சமூகத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைக்க ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி – புளொட் அமைப்பினருமாகிய நாம் என்றும் உறுதுணையாக இருப்போம்.
திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) முன்னாள் உப நகரபிதா, நகரசபை, வவுனியா.

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து போராட்டம்-

batticaloaமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்றுகாலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து போராட்டம் என்பவற்றில் ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் இகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, கையெழுத்து போராட்டம் ஆரம்பமானது. கலந்துரையாடலில் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தம்மிக முனசிங்க அமைப்பாளர் தென்னே ஞானானந்த தேரோ மாட்ட தலைவர் ரி.கிஸாந்த உட்பட முக்கியஸ்தர்கள் பங்கு கொன்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 ஏப்ரல் மாதம் முதல் பட்டதாரிகளாக வெளியேறிய 1500 பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளதாக சங்க தலைவர் கிஸாந்த் தெரிவித்துள்ளார். கையெழுத்து போராட்டத்தில் பெறப்பட்ட கையொப்பங்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான வேலையற்ற பட்டதாரிகள் இதில் இணைந்து கொண்டிருந்தனர்.

குமாரபுரம் படுகொலை வழக்கினை மீள விசாரிக்குமாறு கோரிக்கை-

kumarapuram1996ம் ஆண்டு திருகோணமலை மூதூர் குமாரபுரத்தில் 26 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரிக்கும் வகையில் சட்டமா அதிபர் ஊடாக மேன்முறையீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996ம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை மூதுரு}ர் குமாரபுரத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் ஆறு பேரும் கடந்த 27 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரித்து தமக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு குமாரபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் செய்திகளை வாசிக்க… Read more