மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி மீது காத்தான்குடி பகுதியில் வைத்து கல்லெறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளியை அனுமதித்துவிட்டு திரும்பிய நோயாளர் காவு வண்டி மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது நோயாளர் காவு வண்டியின் ஒரு பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.