25.08.2013.
யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-

2013-08-25 17.16.21 2013-08-25 17.22.40

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பத்தொன்பது வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இதனையடுத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி, அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி, தர்மலிங்கம் சித்தார்;த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா, வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்களும், மண்டபத்திற்கு வெளியே பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையினைக் கேட்டுக்கொண்டிருநதார்கள்