வவுனியா கோவில்குளம் கோவில் புதுக்குளம், வெளிக்குளம் நேற்றுக்காலை வவுனியா கோவில்குளம் கோவில் புதுக்குளம், வெளிக்குளம் பகுதி பிரதேச மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பத்தினருக்கு இந்நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு.க.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில், அவரது தலைமையில் மக்களுக்கான இடர்உதவி நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிவாரணப் பொருட்களுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞர் அணியின் வெளிநாடு வாழ் தோழர்கள் வழங்கி வைத்திருந்தனர்.

இவ் நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான திரு.சுந்தரலிங்கம் காண்டீபன், கழகத்தின் உறுப்பினர் சிவா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.