Header image alt text

கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஓமான் சுல்தானேற்றில் உள்ள இலங்கை சமூகம் வழங்கியுள்ளயது. மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் இந்த நன்கொடைக்கு இலங்கை நில அளவையாளர்கள் சகோதரத்துவ அமைப்பு, வங்கியாளர்கள் மற்றும் ஓமானில் உள்ள ஏனைய தொழில் வல்லுநர்கள் பங்களித்துள்ளனர். Read more

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வரவு செலவு திட்டம் மீதான மூன்றதாவது விவதாம் மற்றும் வாக்களிப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

நாடளாவிய ரீதியிலான ரயில் சேவைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என ரயில்வே திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ரயில்வே சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சில்  அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் நவம்பர் மாதம் நடத்தப்படவிருந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பது அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Read more