Header image alt text

11.04.1984ல் ஆரியகுளம் சந்தியில் மரணித்த மாணவர் பேரவையின் தோழர்கள் கேதீஸ்வரன் (தம்பலகமம்), கிருபானந்தன் (கொக்குவில்) ஆகியோரின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

11.04.2014 ல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் நந்தன் (பசுபதி பரசோதிலிங்கம் – மல்லாவி) அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நிதி கிடைக்கும் பட்சத்தில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பிரமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவினால் பிரதமர் அலுவலகத்தில் இன்று(11) காலை கையளிக்கப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் என்னா பியர்டரை(Anna Bjerde) சந்தித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கி இணைந்து ஏற்பாடு செய்த ஸ்ப்ரிங் மாநாட்டிற்கு இணையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more