அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள்-

maithripala3அடுத்த ஆண்டு மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நடாத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்தவருட ஆரம்பத்தில் நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை ஏற்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக இங்கு குறிப்பிடப்படுகின்றது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது-

australia refugeesகுடிவரவு, குடியகழ்வு சட்டத்தை மீறி அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்களை கடற்படையினர் இன்றையதினம் மட்டக்களப்பு மேற்க கடற்பரப்பில் வைத்து கைதுசெய்துள்ளனர். குறித்த இலங்கையர்கள் வாழைச்சேனை பகுதியிலிருந்து படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர்களை கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவந்துள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவு திணைக்களத்தின் கடல்சார் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்திலிருந்து புறப்பட்ட குறித்த நபர்கள், நீண்ட நாட்களாகப் படகில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல்-

namal rajapakseபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது நாமல் ராஜபக்ஸவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப் நாமல் ராஜபக்ஸவுடன் கைது செய்யப்பட்ட சுதர்ஷன பண்டார கனேகொடவும் பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து பொலிஸ் நிதிக்குக்குற்ற விசாரணைப் பிரிவினரால் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு-

human rightsஇலங்கை கடல் எல்லை மீறல்களில் ஈடுபடும் இந்திய மீனவர்களினால் வடக்கு மீனவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து அனைத்து இலங்கை மீன்பிடி கூட்டமைப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாட்டு மனுவொன்றை தாக்கல் செய்தது.

குறித்த மனுவை தாக்கல் செய்ததினை தொடர்ந்து கருத்து தெரிவித்த அதன் தேசிய அமைப்பொன்றின், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரத்ன கமகே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தற்போதைய நிலையில் தோல்வியுற்றுள்ளது என தெரிவித்திருந்தார்.