வலி. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு-

யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் ஒன்று வலி வடக்கு; பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. குமாரவேல அவர்களின் தலைமையில் இன்றுமாலை திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோரும் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் பிரகாஸ் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.