ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மாத்திரம் மே மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் வீட்டிலிருந்து வெளியேறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு இது பொருந்தாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.