விழிநீர் அஞ்சலி!
அமரர் வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் அவர்கள்

யாழ். எழுதுமட்டுவாழ் தெற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை வேணீஸ்வரன் (தோழர் வேணி) அவர்கள் பிரான்சில் 16.05.2020 சனிக்கிழமை காலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.இவர் இராமநாதன் மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் தென்மராட்சி பிரதேச அரசியல் பிரிவு பொறுப்பாளருமாவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)