இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 May 2020
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 25 May 2020
Posted in செய்திகள்
வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் யுனிட் -2 பகுதியில் கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் மரணமடைந்துள்ளார்.
நேற்று (24) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கற்குவாரியில் கல் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த கற்குவாரிக்கு சென்ற அச் சிறுவன் கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் போத்தல் ஒன்றினை கோரியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 May 2020
Posted in செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று இரவு 11.55 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1141 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் 52 பேர் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
Posted by plotenewseditor on 24 May 2020
Posted in செய்திகள்
முதல் பெண் போராளி தோழர் ஊர்மிளா.
40 ஆவது நினைவு தினம். விதைப்பு : 19.05.1980
உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணிச் செயலாளராகச் செயற்பட்ட வேளையில் அதன் மகளீர் அணியின் செயலாளராக இருந்த ஊர்மிளா என்பவருடன் அறிமுகமாயிருந்தார். ஊர்மிளா மிகுந்த தேசிய உணர்வுகொண்ட போராளி என்பது தவிர அடக்குமுறைகள் மிகுந்த சமூகத்தில் எமக்கு ஆதரவாக கிடைத்த முதல் பெண் என்பது இன்னொரு சிறப்பம்சம் (ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள், கணேசன் ஐயர்). தெல்லிப்பளை வறுத்தலைவிளானை பிறப்பிடமாக கொண்ட தோழர் ஊர்மிளா முதல் ஈழ விடுதலைப் போராளி மட்டும் அல்லாது அவரே முதல் பெண் விடுதலை புலியும் ஆவார். Read more
Posted by plotenewseditor on 24 May 2020
Posted in செய்திகள்
வவுனியா கோவில்குளம் கோவில் புதுக்குளம், வெளிக்குளம் நேற்றுக்காலை வவுனியா கோவில்குளம் கோவில் புதுக்குளம், வெளிக்குளம் பகுதி பிரதேச மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பத்தினருக்கு இந்நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 24 May 2020
Posted in செய்திகள்
21/05/2020 மாலை வவுனியா மகாஇறம்பைக்குளம் மக்களுக்கான இடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு. க.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில், கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான த.யோகராஜா அவர்களின் தலைமையில் மக்களுக்கான இடர்உதவி நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 24 May 2020
Posted in செய்திகள்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான திரு.க.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு. வே.குகதாசன் அவர்களின் தலைமையில் செட்டிகுளம் பிரதேச மக்களுக்கான இடர் நிவாரணப் பொருட்கள் (21/05/2020) காலை அனுப்பி வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 24 May 2020
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1094 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த ஐவரும் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தட்டுள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 24 May 2020
Posted in செய்திகள்
சீசெல்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 பேர், இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். சீசெல்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, விசேட விமானம் மூலம், இவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 23 May 2020
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 40 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 660 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, இதுவரை 1059 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். Read more