நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகளை நவம்பர் மாதமளவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனை, கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

4 கட்டங்களின் கீழ் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அதன் பின்னர், மாணவர்களைப் பரீட்சைக்கு தயார்ப்படுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.