Header image alt text

கோவில்கள், தேவாலயங்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்களில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் ஷாமன் ரஜிந்திரஜித் இதை தெரிவித்துள்ளார். Read more

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட கைதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். 15 கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறியதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். Read more

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் குழுவினர், கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து சிறைச்சாலை கூரையின் மீதேறி போராட்டம் நடத்தி வருகின்றனர். Read more

எமது கட்சியின்செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் (சுப்பிரமணியம் சதானந்தம்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு அவரது கருவேற்புலம்வீதி கொக்குவில் கிழக்கு இல்லத்தில் பிற்பகல் 5.00 யணிவரை இடம்பெற்று அவரது உடல் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்ப்ட்டு தகனம் இடம்பெற்றது. Read more

எமது கட்சியின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணரின் (சுப்பிரமணியம் சதானந்தம்) இறுதி நிகழ்வுகள் இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

மரண அறிவித்தல்-

Posted by plotenewseditor on 22 October 2021
Posted in செய்திகள் 

எமது கட்சியின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் (சுப்பிரமணியம் சதானந்தம்) சுகயீனம் காரணமாக இன்று (22.10.2021) இயற்கை எய்தினார். மேலதிக தகவல்களை பின்னர் அறியத் தருகிறோம்….

22.10.2020 இல் மரணித்த, காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னாள் உபதலைவர்களுள் ஒருவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (பாலா அண்ணர்) அவர்களின் ஓராமாண்டு நினைவு நாள் இன்று

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று (21) முதல் நவம்பர் 17 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more