வசீம் தாஜுதீன் கொலை சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் பிரதிவாதி 25000 ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாவின் இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதிவாதி சார்ப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்ர பெர்ணான்டோ, குற்றப்பத்திரிகை தொடர்பில் அடிப்படை எதிர்ப்பு மனுவினை தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த அடிப்படை எதிர்ப்பு மனு தொடர்பான விசாரணைகளை செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது