Header image alt text

யாழ் சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் முகாமையாளரும், மானிப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தநதையாருமாகிய அமரா் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா 02.08.2019 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. Read more

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு.

காலம்:- 03.08.2019 சனிக்கிழமை மாலை 4.00மணி முதல்,

இடம்:- Bridge End Close, Off Clifton Road, Kingston Upon Thames, KT2 6PZ.

இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு எமது உரிமை போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் அஞ்சலியை செலுத்துமாறு லண்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அன்போடும் அழைத்து நிற்கின்றோம்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

சய்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றவர்களை மூன்று வாரங்களுக்குள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  Read more

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  Read more

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.  Read more

யாழ் கருகம்பனை கலாசார மண்டப திறப்பு விழா நேற்று (28.07.2019) மாலை 3.00 மணியளவில் தமிழ் மன்றம் சனசமூக நிலைய தலைவர் சி.பவநீதன் தலைமையில் நடைபெற்றது. Read more

யாழ். உரும்பிராய் செல்லப்பா சனசமூக நிலைய செல்லப்பா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா-2019 நிகழ்வு இன்று (28.07.2019) பிற்பகல் 2.00 மணியளவில் சனசமூக நிலைய தலைவர் இ.தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. Read more

யாழ். இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தின் 175,ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (28.07.2019) காலை 7.00 மணியளவில் யாழ் ஆயா் பேரருட்திரு
தலைமையில் இடம்பெற்றது.
Read more

Read more

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயம் அமைப்பின் செயலாளர் வைத்தியர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அவர்களுக்கும் ஏனைய இனப்பற்றாளர்களுக்கும் எமது அஞ்சலிகள்!