Header image alt text

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில் பிரான்ஸில் இன்று அஞ்சலி நிகழ்வொன்று நடைபெற்றது.

இன்று 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணியளவில் பிரான்ஸின் 21 Rue Villot, 93120 la courneuve என்னுமிடத்தில் தோழர் கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் பிரான்ஸ் கிளை இணைப்பாளர் தோழர் மார்டடீன் பெர்ணான்டோ உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

யாழ். கோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கமைய புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அங்கு சென்று வாசிகசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.

இன்றுமுற்பகல் 10.30மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வாசிகசாலைக்கான புனரமைப்பு வேலைகள் தொடர்பிலான தேவைகள் குறித்து வாசிகசாலை நிர்வாகத்தினர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கூறினார்கள். இதற்கான புனரமைப்பு வேலைகளுக்காக இயலுமானளவுக்கு நிதியினை ஒதுகிக்கித் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இச்சந்திப்பில் கோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை தலைவர் குகேந்திரன், செயலாளர் ரஜிந்தன், வாசிகசாலை நிர்வாகத்தினர், கிராம சேவையாளர் கோபாலதாஸ், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோசன், வலி கிழக்கு பிரதேசசபை உப தவிசாளர் ம.கபிலன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ. உதயகுமார், கிராம சேவையாளர் கோபாலதாஸ் கலந்துகொண்டிருந்தார்கள்
Read more

யாழ். அச்சுவேலி அரசடி முதலாம் ஒழுங்கை இன்று (21.07.2019) காலை 10.00 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோசன், வலி கிழக்கு பிரதேசசபை உப தவிசாளர் ம.கபிலன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ. உதயகுமார், கிராம சேவையாளர் கோபாலதாஸ், இளைஞர்கள் மற்றும் பயனாளிகள்  கலந்து கொண்டிருந்தனர். Read more

யாழ். அச்சுவேலி வடக்கு விக்னேஸ்வரா கிளை வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை (21.07.2019) 9.30மணியளவில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அச்சுவேலி வடக்கு விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்நிகழ்வு இடம்பெற்றது. அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபையின் உப தவிசாளர் ம.கபிலன், வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ.உதயகுமார், கோப்பாய் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.ஞானமாலா, சனசமூக நிலைய தலைவர் கிருஸ்ணராஜா, செயலாளர் குகநேசன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வதனராஜா மற்றும் நிலைய நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.
Read more

யாழ். ஏழாலை மேற்கு இலங்கையர்கோன் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (20.07.2019) 6.15மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் தர்சன், முன்னாள் கிராம சேவையாளர் ஞானசபேசன், சமூக சேவையாளர் சிவா மற்றும் ஊர்ப் பெரியோர்கள் கலந்துகொண்டனர்.
Read more

யாழ். சுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் வீதியுடன் இணைகின்ற வீதியான பழைய பாடசாலை வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (20.07.2019) 5.45மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

யாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் பொன்விழாவும் கட்டடத் திறப்பு விழாவும் நேற்று (20.07.2019) சனிக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் அம்பாள் சனசமூக நிலைய முன்றலில் அம்பாள் சனசமூக நிலையத் தலைவர் சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். கௌரவ விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், அம்பாள் சனசமூக நிலைய ஸ்தாபகர் இ.தங்கராஜா ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வலி தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், பண்டிதர் க.ஈஸ்வரநாதப்பிள்ளை, வலிதென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் பே.சுபாகர், உயரப்புலம் கிராம அலுவலர் எம்.ஆர்.கே. ரட்ணராஜா, அம்பாள் சனசமூக நிலைய ஆரம்பகால செயலாளர் வை.சின்னத்துரை, ஒய்வுநிலை அதிபர் எஸ்.நாகையா ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். Read more