Header image alt text

Punnalai9யாழ்.. புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர் பாடசாலைக்கான தளபாடங்கள் இன்று (19.12.2014) புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வட மாகாணசபை நிதியிலிருந்து 30,000 ரூபாய் பெறுமதியுடைய தளபாடங்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. ரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு கெங்கா அவர்கள் உள்ளிட்ட சனசமூக நிலைய நிர்வாகத்தினரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வின்போது நலன்விரும்பிகள் சிலரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கற்றல் உபகரணங்களும் இக்கிராமத்தைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு இன்று வழங்கிவைக்கப்பட்டது. திரு. கெங்கா அவர்களின் ஏற்பாட்டில் இதற்கான நிதி சேகரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் விடுமுறை நிறைவடைந்து மீண்டும் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்பதாக இப்பிள்ளைகளுக்குத் தேவையான மேலும் பல உபகரணங்களையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் மாணவர்களும், பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Punnalai1 Punnalai3 Punnalai4 Punnalai5 Punnalai6 Punnalai7 Punnalai10 Punnalai11 Punnalai12 Punnalai13

DTயாழ். குடாநாட்டிலுள்ள பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், முன்பள்ளிகள் உட்பட 52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்கியுள்ள புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து உதவும் வகையில் சுழற்சிமுறைக் கடன் வழங்குவதற்கும் நிதியுதவி வழங்கியுள்ளார். வட மாகாணசபையின் 2014ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து தனக்கு வழங்கப்பட்ட 40 லட்சம் ரூபாவை பரவலாக குடாநாட்டிலுள்ள அரசாங்கப் பாடசாலைகள் உட்பட பொது அமைப்புக்களின் அபிவிருத்திக்காக அவர் வழங்கியுள்ளார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு ஏழு பாடசாலைகளுக்கு கட்டிடம், கணணி, வாத்தியக்கருவிகள் போன்றவற்றிற்காக 6லட்சத்து 90ஆயிரம் ரூபாவையும், நான்கு ஆலயங்களின் கட்டிடப் புனரமைப்புக்கு 4லட்சம் ரூபாவையும், 19 சனசமூக நிலையங்களுக்கு கட்டிடம், குடிநீர்த் தாங்கி, குழாய்க்கிணறு, தளபாடங்கள் போன்றவற்றிற்கு 13லட்சத்து 25ஆயிரம் ரூபாவையும், ஏழு விளையாட்டுக் கழகங்களின் உபகரணங்கள், மைதானம் திருத்தல் என்பவற்றிற்காக 4லட்சத்து 25ஆயிரம் ரூபாவையும், ஏழு கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு தளபாடம், கட்டிடம் புனரமைப்பு, நீர் இறைக்கும் இயந்திரம், குழாய்க்கிணறு அமைத்தல் ஆகியவற்றிற்காக 5லட்சத்து 50ஆயிரம் ரூபாவையும் மூன்று முன்பள்ளிகளின் அபிவிருத்திக்கு 1லட்சத்து 90ஆயிரம் ரூபாவையும் அவர் வழங்கியுள்ளார். இதேவேளை முதியோர் சங்கத்திற்கு 25ஆயிரம் ரூபாவும், சுகாதார வைத்தியப் பணிமனைக்கு 50ஆயிரம் ரூபாவையும், பிரதேச சபைக்கு 50ஆயிரம் ரூபாவையும், விவசாய சம்மேளனத்திற்கு 75ஆயிரம் ரூபாவையும், சிக்கன கூட்டுறவுச் சங்கத்திற்கு 50ஆயிரம் ரூபாவையும் வழங்கியுள்ள வட மாகாணசபை உறுப்பினர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் சுழற்சிமுறைக் கடன் வழங்குவதற்கு 1 லட்சம் ரூபாவையும் வழங்கியுள்ளார். இதேவேளை மாகாண சபைக்கூடான தனது சம்பளத்தையும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக அவர் தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவர் கைது-

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரம் இடம்பெறவிருக்கும் மைதானத்தில் நேற்றிரவு சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவரை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆளும்கட்சி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பகுமாரின் (இனியபாரதி) ஏற்பாட்டில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நாளை தேர்தல் பிரசாரம் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் 22, 23 வயதுகளையுடைய திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களாவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சியில் எலும்புக்கூடு மீட்பு-

யாழ். வடமராட்சி முள்ளிப் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் புல் வெட்டிக்கொண்டிருந்த இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்கு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலனுடன் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். தேங்காய் மட்டைகளுக்குள் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த எலும்புக்கூடானது, கடந்த சில நாட்களுக்கு முன்னரே எரியூட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். எலும்புக்கூட்டுடன் பெண்கள் அணியும் ஆடைகளின் பாகங்களும் மீட்கப்பட்டன. நீதவானின் உத்தரவுக்கமைய பரிசோதனைக்காக எலும்புக்கூடு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பில விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயகமவில் வீடமைப்புத் திட்டப் பணிகள்; ஆரம்பம்-

டயகம பிரதேசத்தில் அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. மலையகத்தில் 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் ஊடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு டயகம வெளர்லி தோட்டப்பகுதியில் வீடுகள் அற்றநிலையில் உள்ளவர்களுக்காக 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளதோடு மொத்தம் இப்பிரதேசத்தில் 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

மீனவர்கள் தொடர்பில் இலங்கை இந்தியா இடைபே பேச்சு-

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான அனைத்துகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ராஜ்யசபாவில் அறிக்கை ஒன்றை முன்வைத்து இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் இலங்கை அதிகரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காண்பது குறித்து இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

m1நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளியேன் என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனமான 100 நாட்களில் புதிய நாடு, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் இன்றுபகல் வெளியிட்டு வைக்கப்பட்டது. விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும்போது விஹாரமஹாதேவி பூங்காவில் மின்தடையும் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன,

தன்னிச்சையான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு பதிலாக நாடாளுமன்றம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும். அதில் ஜனாதிபதியும் நாட்டின் ஏனைய பிரஜைகளை போல் சட்டத்திற்கு முன் சாதாரண பிரஜையாக கருதப்படும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி சட்டரீதியான விசேட சிறப்புரிமைகள் ஜனாதிபதிக்கு கிடைக்காது. சகல திருத்தங்களிலும் நாட்டின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, இறையாண்மை என்பன பாதுகாக்கப்படும். இவற்று பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு அமைச்சரவை மற்றும் அதன் துறைகள் தீர்மானிக்கப்படும். அமைச்சுக்களின் செயற்பாடுகளுக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு முறை வலுப்படுத்தப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர மக்கள் பிரதிநிதிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறி கோவை சட்டமாக்கப்படும். தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் மேற்கொண்டு வரும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக நிறுத்தும் நோக்கத்தில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்படும். மக்களை துன்பத்திற்கு உள்ளாக்குவதுஇ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதுஇ இலஞ்சம் பெறுவது, பாலியல் துஷ்பிரயோகம், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடக்காத சமூகத்தை உருவாக்க இது உதவும். Read more

sangariநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை சரித்திரத்தில் நடைபெறும் மிக இக்கட்டான தேர்தலாகையால் தமிழ் மக்கள் தமதுதெரிவில் மிககவனத்துடன் செயற்படவேண்டும். கடந்த தேர்தல்களில் குறிப்பாக இரண்டு ஜனாதிபதித் தேர்தலில் நடந்தவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போதுதமிழ் தேசிய கூட்டமைப்பு இத் தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்துகொண்டுதமிழ் மக்களைஅவர்களின் இஸ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகிறது.

 கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களில் நடந்த தவறுகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதியைகூட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர். இதன் காரணமாகவோ என்னவோ அவர்கள் இப்போது மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்களுடன் பேசுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டொருநபரே இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் ஏனையவர்கள் வெறும் ஆமாம் போடுபவர்களே என்பதையும் அனைவரும் அறிவர். Read more