Header image alt text

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவர் ஜ.தே.கவில் இணைவு

tதமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக செயற்பட் இராஜ குகனேஸ்வரன் ஜக்கிய தேசியக்கட்சியில் இணைந்துகொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் டெலோ ஆகியவற்றில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக அண்மைக்காலமாக செயற்பட்டு வந்திருந்த நிலையிலேயே தற்போது ஐ.தே.கவுடன் இணைந்துள்ளார். இவர் அண்மைக்காலமாக த.வி.கூ கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தவர் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் வைத்து அவர், இணைந்துகொண்டுள்ளார்.

எதிரணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிராச்சாரக் கூட்டம்

maithiபொலனறுவையில் இன்று தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள எதிரணியின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நாட்டிற்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயார் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு அரசாங்கம் நாட்டிற்கு என்ன செய்தது என இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் கேள்வி எழுப்பினார்.
விவசாயிகளுக்கு ஓய்வூதியதிட்டத்தை முன்னெடுப்பதாக உறுதியளித்த அவர. தான் பதவிக்கு வந்ததும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் கடன்களை இரத்துச் செய்வதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து தான் விலகியதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார பொறிமுறை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூனடறாவது தடவையாக பதவிக்கு வந்தால் அவர் நிச்சயமாக சர்வாதிகாரியாகவே விளங்குவார் என்றார்.
விடுதலைப்புலிகள் என்னை கொலைசெய்ய முயன்றனர் என குறிப்பிட்ட அவர் தற்போது தன்னை அரசாங்கம் புலி என்கிறது என்றார்.
நான் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்ய தயாராகவுள்ளேன், பதவிக்குவந்தால், எவரையும் பழிவாங்காமல் கௌரவமாக நடத்துவேன், என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

நைஜீரிய பள்ளிவாசல் தற்கொலைத் தாக்குதல்

nigeria_muslimattackநைஜீரியாவில் வடக்கே, கானோ நகரில் 29.10.14 வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல நூறு பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. வெள்ளிக்கிழமை வழமையான தொழுகை நேரத்தின் போது முதலாவது குண்டு கார் ஒன்றில் வைக்கப்பட்டு பள்ளிவாசலுள் தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்களை நோக்கி ஓட்டிச் சென்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது மக்கள் அங்கிருந்து தப்பி வெளியில் வர முயன்றபோது இரண்டாவது, மூன்றாவது குண்டுகளும் வெடித்துள்ளன. Read more

பத்திரிகை அறிக்கை

Posted by plotenewseditor on 29 November 2014
Posted in செய்திகள் 

பத்திரிகை அறிக்கை

29.11.2014 plote2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் டொமினிக் அன்ரன் அவர்களை கட்சியிலிருந்து விலக்குவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்தது. அதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கையளிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்படும் என்ற ஒரு நிலைமை இருந்தபடியால் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி உட்பட இரண்டு பிரதேச சபைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வேட்புமனுவை திடீரென இரவோடிரவாக செய்யவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டதன் காரணத்தினால் வேட்பாளர்களை மக்கள் மத்தியில் சென்று சரியான முறையிலே தெரிவு செய்வதற்கு போதிய அவகாசம் இருக்கவில்லை. ஆகவே, எங்களுடைய கட்சி ஆதரவாளர்களையும், மற்றைய கட்சி ஆதரவாளர்களையும் கொண்டு அந்த வேட்புமனு பூர்த்தி செய்யப்பட்டது. 

பின்பு அந்தப் பகுதி மக்கள் சார்பாக அதாவது, அந்தப் பகுதி மக்களைச் சேர்ந்த, மக்களால் மதிக்கப்படுகின்றவர்களைக் கொண்டு அந்தப் பதவிகள் பூர்த்திசெய்யப்படுமென்றும், எனவே அந்தப் பதவிகளிலே இருப்பவர்கள் இராஜினாமா செய்யவேண்டுமென்றும் வேட்புமனு கையளிக்கும்போதே அந்த தேர்தலிலே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு கூறப்பட்டது. ஆயினும் அவர்கள் அதைச் செய்வதற்கு தயங்கிக் கொண்டிருந்த காரணத்தினால்தான் அவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்கள்.

இதில் டொமினிக் அன்ரன் என்பவர் எங்களுடைய கட்சியின் ஒரு தீவிர ஆதரவாளராக செயற்பட்டு வந்தவர். எங்களுடைய கட்சிக்கும் அவருடைய செயற்பாடுகளுக்கும் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய மறுத்த காலம்தொட்டு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருந்தது.

ஆகவே, அவருடைய செயற்பாடுகளுக்கும், எமது கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதை மக்களுக்கு அறியத்தருகின்றாம்.

த.சித்தார்த்தன்,
தலைவர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
29.11.2014.

சுழிபுரம் திருவடிநிலைக்கு புளொட்டின் நோர்வே அமைப்பாளர் விஜயம்-

chulipuramchulipuram 1chulipuram 2யாழ். சுழிபுரம் திருவடிநிலைக்கு புளொட் அமைபபின் நோர்வே கிளை அமைப்பாளர் இராசசிங்கம் சிவராசா (ராஜன்) அவர்கள் நேற்று (27.11.2014) வியாழக்கிழமை விஜயம் செய்திருந்தார். இதன்போது அப்பகுதியில் அண்மையில் மீளக்குடியமர்ந்துள்ள மீன்பிடி மற்றும் கூலித் தொழில்களை பிரதான தொழிலாகக் கொண்ட மக்களது நிலைகள் தொடர்பிலும் அவர்களின் மீளக்குடியமர்வின் பின் அவர்களுக்கு கிடைக்கப்பட்ட உதவிகள் பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளார். இவ் நிலையில் இப் பகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்தொழிலாளர் அமைப்பினர் தாம் சுதந்திரமாக தொழில் செய்ய முடியது உள்ள நிலைமை பற்றி அமைப்பாளருக்கு தெரியப்படுத்தியதுடன் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதில் உள்ள இடர்நிலைகள் தொடர்பிலும் விளக்கினர். இவ் சந்திப்பின்போது அப் பகுதியில் நடைபெறும் வலி மேற்கு பிரதேச சபையால் மீளப் புனரமைக்கப்படும் வீதிகள் மற்றும் குடிநீர் திட்டங்களையும் புளொட் அமைப்பின் நோர்வே கிளையின் அமைப்பாளர் பார்வையிட்டுள்ளார்.

கல்விளான் காந்திஜி சனசமூக நிலையத்தில் குடிநீர் இணைப்பு பற்றிய கலந்துரயாடல்-

kalvilan gandhiji sana samooka nilaiyam (2)kalvilan gandhiji sana samooka nilaiyam (3)யாழ். சுழிபுரம் கல்விளான் காந்திஜி சனசமூக நிலையத்தில் கடந்த 26.11.2014 புதன்கிழமை அன்று மாலை 3மணியளவில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் வேர்ள்ட் விஷன் நிறுவன உதவித்திட்டத்துடன் அப் பகுதி மக்களுக்கு வழங்கப்படவுள்ள வீட்டு அலகுகளிற்கான குடிநீர் இணைப்பு தொடர்பான மக்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் வேர்ள்ட் விஷன் மாவட்ட திட்டப் பணிப்பளர் அன்டனி மற்றும் வலி மேற்கு பகுதிக்குரிய இணைப்பாளர் அலக்ஸ் ஆகியோரும் பிரதேச சபையின் சிரேஸ்ட தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் ம.சிவநாதன் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் திரு.ச.புலேந்திரன் அப் பகுதி கிராம உத்தியோகஸ்தர் திரு தீசன் ,சமுர்த்தி உத்தியோகஸ்தர் திரு சுகந்தன் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் திட்டம் தொடர்பில் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் குறிப்பிடுகையில், இவ் திட்டம் நிறைவேறும் சந்தர்ப்பத்தில் இக் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்படும் என்பதோடு இப் பகுதி மக்களது வாழ்க்கைத் தரத்திலும் மாற்றஙகள் ஏற்பட வழி ஏற்படும் என்றார். இவ் திட்டம் நிறைவேறவேண்டும் என்பது தனது மிக நீண்ட கால கனவு எனவும் அவர் குறிப்பிட்டார்

மன்னாரில் வெள்ளம் காரணமாக 1,428 குடும்பங்கள் இடம்பெயர்வு-

mannaril vellam kaaranamaakaதொடர்ந்து பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 1,428 குடும்பங்கள் வரை இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி மன்னார் பிரதேச செயலக பிரிவில் 758 குடும்பங்களை சேர்ந்த 2903பேரும், நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் 12 குடும்பங்களை சேர்ந்த 41 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 658 குடும்பங்களை சேர்ந்த 2714 பேரும் இடம்பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மன்னார் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான சகல வெளிப் போக்குவரத்துக்களும் இன்றுகாலை 10மணியுடன் முடக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை புத்தளத்திலிருந்து படகில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மீனவர்களையும் விடுவிக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை-

thamil thesiya koottamaippu indiaமரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் ஐந்து இந்தியர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இதில் ஐந்து இந்திய மீனவர்கள் அண்மையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சியுள்ள இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது இரு தரப்புக்களுக்கும் ஒரேவிதமாக நியாயம் வழங்கப்பட வேண்டியது அவசியமானதென கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் சுட்டடிக்காட்டியுள்ளார். குற்றச்செயலில் ஈடுபட்டதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தரப்பினருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஏனையவர்களை தண்டிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் வரவு செலவுத் திட்ட விவாதங்களின்போதும் தாம் இந்த விடயம் குறித்து பாராளுமன்றில் வலியுறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர் 10 இல் வெளியாகும்-

untitledபொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 10ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இதில் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கைச்சாத்திடுவர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் ஆட்சிமுறையை உருவாக்குதல், தேர்தல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்தல் என்பன உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் அமைச்சரவையையும், அமைச்சரவைக்குப் பொறுப்புக்கூறும் பிரதமரையும் உருவாக்குவதுடன், அமைச்சரவையின் பிரதானியாக பிரதமர் செயற்படுவார். இதனூடாக புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கவுள்ளோம் என்றார்.

யோசனைக்கு ஆதரவளிப்போருடன் ஹெல உறுமய இணைவு-

untitledதாங்கள் முன்வைத்துள்ள அவசர அரசியல் திருத்த பிரேரணைக்கு ஆதரவளிக்கின்ற தரப்பினருடன் இணைந்து செயற்படவிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கட்சியின் பிரதான செயலாளர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த யோசனைகள் ஏற்கனவே அரசாங்கத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த யோசனைகளை முன்வைக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த யோசனைகளுக்கு பொது வேட்பாளர் வழங்குகின்ற பதில்களின் அடிப்படையில் எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

எமது ஆட்சியில் யாரும் யுத்தக்குற்ற நீதிமன்றுக்கு செல்ல மாட்டார்கள்-மைத்திரிபால-

ape jathika peramunaதாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றால், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையோ, அவரது குடும்பத்தாரையோ அல்லது இராணுவ வீரர்களையோ யுத்தகுற்ற விசாரணை நீதிமன்றத்தில் நிறுத்த இடமளிக்கப் போவதில்லை என எதிகட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் கூறும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அல்லது, அவரது குடும்பத்தினர் அல்லது போரில் சம்பந்தப்பட்ட படைத்தரப்பினர் யாரையும் போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு புதிதாக தெரிவு செய்யப்படும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்றும் அவர் கூறியுள்ளார். தமது அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பம் மற்றும் சகல பாதுகாப்பு கட்டமைப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நலத்திட்டங்களையும் தாம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின்னர் வழங்கவிருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரி மனு தாக்கல்-

untitledஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று மீறியுள்ளார் என நீதிமன்றப் பிரகடனம் செய்ய வேண்டும். அத்துடன் இந்த மனுவின் தீர்ப்பு வரும் வரையில் ஜனவரியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கை மீதும் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது. பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தாமல் 18ஆவது திருத்தத்தை சட்டமாக்கதியதன் மூலம் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார். எனவே அவர் மூன்றாம் முறை ஜனாதிபதியாகும் தகுதியை மட்டுமல்லாது அவர் தற்போதைய ஜனாதிபதி பதவியாக இருக்கும் தகுதியையும் இழந்துள்ளார். ஆகையால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மனுதாரர் கேட்டுள்ளார். மேலும், அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு பொருத்தமானவரை நீதிமன்றமே அறிவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் மீண்டும் கைது-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட அகதிகள் குழு ஒன்றை அவுஸ்திரேலிய கடல்பாதுகாப்பு அதிகாரிகள், இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற அவர்கள், இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு 23 தமிழர்கள், 13 சிங்களவர்கள் மற்றும் ஒரு பறங்கியர் அடங்கிய 37 பேர் கொண்ட அகதிகள் குழு, கடந்த முதலாம் திகதி தங்களின் பயணத்தை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தற்போது குற்றபுலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதாவது கடந்த முதலாம் திகதி குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துள்ளதாகவும் இதில் சிறுவர்கள் 6பேரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் யாழ்ப்பாணம், சிலாபம், கொழும்பு மற்றும் மாரவில பகுதிகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சீன நீர்மூழ்கி கப்பல் குறித்து இந்தியா இலங்கையுடன் பேச்சு-

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் மாநில வெளிவிவகார அமைச்சர் வை.கே.சின்ஹா இதனை நேற்றையதினம் இந்திய ராஜ்யசபாவில் வைத்து கூறியுள்ளார். குறித்த நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பில் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் வகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் தமது நாட்டில் இடம்பெறாது என்பதை இலங்கை இந்தியாவுக்கு உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையில் இன்னும் 24 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநில வெளிவிவகார அமைச்சர் வை.கே.சின்ஹா மேலும் கூறியுள்ளார்.

கூட்டமைப்புடன் இன்னமும் பேசவில்லை-எதிரணியின் பொது வேட்பாளர்-

maithripala_sirisenaதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றுமுற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது இவ்விதமிருக்க எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் பொலித்தீன், கட்டவுட், போஸ்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் கூட்டங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கூட்டம் நடைபெறும் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் பரீட்சை நிலையங்கள் நடைபெறும் இடங்களை அண்மித்த பகுதிகளில் எந்தவொரு பிரசார நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாழைச்சேனையில் சந்தேகத்தின்பேரில் இருவர் கைது-

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றுமாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாழைச்சேனை இராணுவ முகாமின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் கையடக்க தொலைப்பேசியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறுந்தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 20, 34 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்-

ஜனாதிபதி தேர்தலுக்காக நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் இதுவரை கட்டுபணம் செலுத்தியுள்ளனர். மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாச இதனை தெரிவித்துள்ளார். அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் என்ற அர்த்தத்தை கொண்ட ஒக்கோம வெசியோ ஒக்கோம ரஜவரு அமைப்பு, ஜனசெத முன்னணி, சோசலிச சமத்துவ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி ஆகிய அரசியல் கட்சிகளே இவ்வாறு கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ் கட்டளைத் தளபதியாக ஜகத் அல்விஸ் நியமனம்-

யாழ்ப்பாணத்துக்கான இராணுவ கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ தளபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்றுமுதல் தமது பொறுப்புகளை கையேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்துக்கான இராணுவ கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா, கொழும்பு பாதுகாப்பு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மஹிந்தவின் விளம்பரங்களை பாதுகாக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் அடங்கிய தேர்தல் விளம்பரங்களை பாதுகாக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, விளம்பரங்களுக்காக அரசாங்கத்தின் பணம் பெருந்தொகையில் செலவு செய்யப்படுகின்றது என்றும் கூறியுள்ளார். கொழும்பில் இன்றுமுற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் நாங்கள் கட்சி மாறுவது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கே தெரியாது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நவீன் திஸாநாயக்க எதிரணியில் இணைவு, கூட்டமைப்பு உறுப்பினர் ஆளும் கட்சியில் இணைவு-

naveen thisanaikeபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமைச்சர் நவீன் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சு பதவியை ராஜினாமா செய்வது மற்றும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.P.thiyiagarajaஇதேவேளை அம்பாறை, ஆலயடிவேம்பு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் பி.தியாகராசா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்று இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் பதவி விலகல்-

asvar rajinamaஅரசாங்கத்தின் தேசிய பட்டியலில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர், ஏ.எச்.எம். அஸ்வர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் அவர் கையளித்துள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம் அஸ்வரின் வெற்றிடத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி நிமியக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் விசேட சுற்றறிக்கை-

therthal nadavadikkaiku arasa valankalaiஅரச மற்றும் அரச கூட்டுத்தாபன யாப்பு சபைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் தேர்தல்கள் ஆணையாளரால் விசேட சுற்றறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சு செயலர்கள், மாவட்ட செயலர்கள், திணைக்கள பிரதானிகள், அரச கூட்டுத்தாபன மற்றும் யாப்பு சபை தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அரச கார்கள், அலுவலகங்கள், கட்டிடங்கள் போன்றவற்றை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதுதவிர ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊழியர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு நியமனம் வழங்குதல், பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் மட்டுப்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் தனது சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்பே ஜாதிக்க பெரமுன புறா சின்னம்-மைத்திரிபாலவின் டுவிட்டரில் தகவல்-

ape jathika peramunaஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டத்தை மீறும் அரச ஊழியர்கள் மீது வழக்கு தாக்கல்-

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறி நடக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைபடி வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின் அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை, 100 நாட்களில் எவ்வித யாப்பு திருத்தத்தையும் செய்ய முடியாதென நேற்றுமாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர சட்டத்தரணிகள் சங்க செயலர் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.

குழிக்குள் விழுந்து இரு குழந்தைகள் உயிரிழப்பு-

திருகோணமலை, சேருநுவர பகுதியில் நேற்றுக்காலை 8.30அளவில் குழியொன்றில் விழுந்து இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் தலைசிங்கம் சதுப்பியா (இரண்டரை வயது) மற்றும் தங்கேஸ்வரன் சாதனா (2வயது) ஆகிய இரு குழந்தைகளே உயிரிழந்துள்ளன. சேருநுவர, இறங்குதுறை, முகத்துவாரம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக் குழந்தைகள், அவர்களது வீட்டுக்கு பின்னால் விளையாடிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த தண்ணீர் நிரம்பிய குழியொன்றுக்குள் விழுந்துள்ளனர். குழந்தைகளைக் காணவில்லை என பெற்றோர் தேடும்போது, அவ்விருவரும் குழியில் விழுந்; கிடந்துள்ளனர். உடனடியாக, குழந்தைகளை ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் பல திருட்டுக்களுடன் தொடர்புடையவர் கைது-

வவுனியாவில் திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வவுனியாவில், 05 வீடுகளில் அண்மையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து மடிக்கணணி, கைத்தொலைப்பேசிகள் மற்றும் மோட்டார் சைக்கில் உதிரிப்பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரை சேர்ந்த 41 வயதான கட்டட நிர்மாண பணியில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு-

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகின்றது. 20 நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையணிகளின் பிரதானிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவிக்கின்றார். இந்த மாநாடு நாளை மறுதினம் வரை நடைபெறுவுள்ளது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய வலயத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் பிரதானிகள் பங்கேற்கும் மாநாடு கொழும்பில் நடத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டயலொக் டிவியில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுக்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு-

dailogசிரச சட்டண அரசியல் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பான சந்தர்ப்பத்தில், டயலொக் டிவியூடாக ஏற்பட்ட இடையூறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் சிலர் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பு டயலொக் நிறுவன பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாம் பணம் செலுத்தி பெற்றுக்கொண்ட சேவையை உரிய முறையில் வழங்குவதற்கு குறித்த நிறுவனம் தவறியுள்ளதாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தெற்கு அதிவேக வீதிக்கு மூன்று வயது-

தெற்கு அதிவேக வீதி திறக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவுபெறும் நிலையில் அதில் இடம்பெற்ற 12 வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தெற்கு அதிவேக வீதியில் மொத்தம் 1227 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 409 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் உலகத்தில் உள்ள ஏனைய அதிவேக வீதிகளுடன் ஒப்பிடுகையில் விபத்துக்கள் குறைவு என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

வவுனியா குட்செட் வீதி 1வது ஒழுங்கைக்குள் வீடுகள் கடைகள் மலசலகூடம் என்பவற்றிற்குள் நீர் புகுந்ததால் மக்கள் பாதிப்பு-

vavuniya 4)வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட தோணிக்கல் கிராமத்தின் குட்செட் வீதி முதலாவது ஒழுங்கைக்குள் உள்ள வீடுகள் கடைகள் மலசலகூடத்தினுள் மழை நீர் புகுந்து மக்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதேச சபைக்கு மக்களினால் செலுத்தப்பட வேண்டிய ஆதன வரிகள்(சோலைவரி, வியாபாரஅனுமதிவரி) போன்றவற்றை மக்களிற்கு என்ன கஸ்ரம் என்றாலும் குறித்த காலஎல்லைக்குள் கட்டியாக வேண்டும் என்றும் தவறினால் பிரதேச சபை சட்டதிட்டங்களிற்குட்பட்ட நடுக்கண்டல் (அசையும் சொத்து, அசையா சொத்து பறிமுதல்) செய்யப்படுமென்று உடனுக்குடன் ;கடிதம்மூலம் அறிவித்தல் கொடுத்து அறவீடு செய்து வருகின்றனர். இது இவ்வாறு இருக்க அனாதரவான விதவையான 87 வயதுடைய மூதாட்டி கடந்த பல வருடங்களாக மழைகாலங்களில் வீட்டினுள்ளும் மலசலகூடத்தினுள்ளும் நீர் புகுந்து பாதிக்கப்படுவதை பிரதேச சபை நீர்வாகமுட்பட சம்மந்தப்பட்ட சகல அதிகாரிகளிற்கும் அவர்களது அலுவலகம் சென்று மனுகொடுத்து அறிவித்தும் எந்தப்பலனும் இற்i;றவரை கிடைக்காமல் இன்றும் பாதிப்பை சந்தித்துள்ளார். இதைவிட விதவைகளை தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் வீடுகளிற்குளுக்குள் ஆண் துணையுள்ள குடும்பத்தினர் மதில்களை உடைத்து அவர்கள் வளவுகளிற்குள் நீரை புகவிட்டு பாதிப்புற செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அயல்வீட்டிலுள்ள உறவினர்கள்போல் பழகிவர்களும் சண்டைகளை பிடிக்கவேண்டியுள்ளது. இவைகளை சீர் செய்வதாயின் உரிய நிர்வாகத்தினர் சீரான வடிகாலமைப்பை சீர் செய்து உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களின் வீடுகளிற்குள் நீர்புகுவதை தடுத்து நிறுத்தலாம் என கருதுவதுடன் வரிகளை மாத்திரம் அறவிடுவது மட்டுமல்ல மக்களிற்கு சேவை செய்யவும் பிரதேச சபை பயன்பட வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

vavuniya  water 1vavuniya 4)vavuniya  water

இரு அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன-

therthal nadavadikkaiku arasa valankalaiஅங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.. “ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு” கட்சியின் எம்.பி.கெலனிமுல்ல நேற்று ராஜகிரியவிலுள்ள தேர்தல்களில் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரசேன தெரிவித்துள்ளார். ஜனசெத்த பெரமுணவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரரும் ஏற்கனவே கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுககான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் எதிர்வரும் ஏழாம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.தே.க உறுப்பினர்கள் பொது வேட்பாளர் சந்திப்பு-

untitledபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தார். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர். இந்தநிகழ்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹ_னைஸ் பாருக், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக் கொண்டார். ஏற்கனவே அமைச்சர் றிசாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான அவர், இன்று அதிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார். ஏற்கனவே நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தனித்து செயற்படவிருப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கும் வேலைத் திட்டம்-

janathipathiஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெறும் வன்முறைகளைத் தடுக்க பயனுள்ள வேலைத் திட்டம் ஒன்று அவசியம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் அதிரடிப்படை உத்தியோகத்தர் உயிரிழப்பு-

தெனியாய – கொட்டபொல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்துப்பாக்கிச்சூடு நேற்று இரவு 9.15அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முகாமில் பணியாற்றும் 24 வயதான பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு கடமையில் இருந்த மற்றுமொரு கான்ஸ்டபிளே துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்தைச் சூழ இராணுவம்-

யாழ் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி, நேற்றையதினம் இரவு முதல் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பவள், கவச வாகனங்கள் மூலம் கொண்டு இறக்கப்பட்ட இராணுவத்தினர், அவ்வழியாக வாகனங்களில் சென்றோரை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் என்பன பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதை தடுக்கும் நோக்குடன் இராணுவத்தினர் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வெள்ளம்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப் பகுதியில் கடும் மழையுடன் கடல் கொந்தளிப்பும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தொடச்சியாக பெய்துவரும் அடை மழையால் நீர் நிலைகள் அனைத்தின் நீர் மட்டங்களும் அதிகரித்து காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் தீ விபத்து-

கோட்டை, சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் மருந்தகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். குறித்த தீயினால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கானையில் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு-

25.11.2014 அன்று சங்கானையில் நடமாடும் பொலிஸ் நிலையத்தினை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தினர் திறந்து வைத்துள்ளனர் இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கனைப் பிரதேச செயலர் திரு ச.சோதிநாதன் மற்றும் சங்கானை வர்த்தக சங்க பட்டிண அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேற்படி நடமாடும் சேவையினை யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியேற்சகர் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்து பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

வலி மேற்கு பிரதேச சபையின் ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழான வேலைத் திட்டங்கள்-

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்ட அமர்வு 10.11.2014ம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு பிரதேச சபையின் தலைமையலுவலக கேட்போர் கூடத்தில் சபையின் கௌரவ தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் மௌன வணக்கத்துடன் ஆரம்பமானது. கௌரவ தவிசாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்று தனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டார். கௌரவ தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கூறுகையில் ஒரு மில்லியன் ரூபா திட்டத்தில் பின்வரும் வேலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார். Read more

நடக்க வேண்டியவை சரியான நேரத்தில் நடைபெறும்-மைத்திரிபால சிறிசேன-

santhirikka_maithiri_001தான் தற்போதும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர், பொதுச் செயலாளர் என எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சி உறுப்புரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறிய போதும் அவை சட்ட ரீதியில் நடைபெறவில்லை என இன்று கம்பஹா, ஹொரகொல்ல – பண்டாரநாயக்க சமாதி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பண்டாரநாயக்க ஜனன தினமான டிசம்பர் 8ம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்று பண்டாரநாயக்க வழியில் செயற்படவுள்ளதாகவும் சமாதிக்கு அருகில் நின்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் 17 வயது இளைஞனாக வாக்குபலம் இன்றி இருந்த காலத்திலேயே தனக்கு சிறீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை கிடைத்ததாகவும் கட்சியில் தனக்கு 47 வருடகால அனுபவம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட தலைவர்கள், குழுக்கள் விடுத்த அழைப்பின் பேரில் பொது வேட்பாளராக போட்டியிட தான் முன்வந்தமை நாட்டின் தேசிய எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யவே என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். தான் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறு கட்சியுடன் இணையவில்லை என்றும் பொது வேட்பாளராக பொது எதிரணியில் போட்டியிடுவதாகவும் கூட்டணி அரசியல் தனக்குப் புதிதல்ல எனவும் அவர் கூறினார். தன்னோடு இணைவதாகக் கூறிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என்று சிலர் கேள்வி எழுப்பி வருவதாகவும் விடியும் போது நல்ல நல்ல விளையாட்டுக்களை காண முடியும் என்றே அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளதெனவும் நடக்க வேண்டியவை சரியான நேரத்திற்கு நடைபெறும் என்றும் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராஜதுரை எம்.பி ஐ.தே.கவில் இணைவு, பிரதேச சபை உறுப்பினர் கட்சி தாவல்-

imagesCABMV835நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். ஐ.தே.கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தாம் ஆதரவளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை திருகோணமலை, சேருவில பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இன்றுகாலை இடம்பெற்ற சேருவில பிரதேச சபை மாதாந்த அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றியவாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் அருகில் அவர் அமர்ந்ததாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக கே.சிவலோகேஸ்வரன் இதன்போது குறிப்பிட்டதாகவும் தெரியவருகிறது.

சர்வாதிகாரத்தை உடைக்க 23ஆம் 24ஆம் திகதிகள் சரியான நாட்கள்-மைத்திரிபால-

maithripala_sirisenaசர்வாதிகாரத்தை உடைப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேநேரம் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் மாதம் 23ஆம், 24ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் இன்றையதினம் முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள். டிசம்பர் மாதம் 4ஆம் திகதியாகும் என்றும் தேர்தல் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-

ratnapuraஇரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு 7 மணி தொடக்கம் 24 மணித்தியாலத்திற்கு தேசிய கட்டுமாண ஆராய்ச்சி நிறுவனத்தால் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மண்சரிவு, கல்சரிவு, மண்மேடு சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இரத்தனபுரி மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகம்மீது துப்பாக்கிச்சூடு-

UNP office shootingகண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி அமைப்பாளருமான எம்.எச்.ஏ ஹலீமின் தேர்தல் காரியாலயம்மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கண்டி மாவில்மடயில் உள்ள கட்சி காரியாலயத்தின் மீதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காரியாலயத்தில் இருக்கவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யா-அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் மாகாணமட்ட வலைப்பந்து அணியினர் – 2014

15 vayathu ani15 வயதுப்பிரிவு இரண்டாம் இடம் (நிற்பவர்கள் இடமிருந்து வலமாக)
திரு.ப.பிரதீபன் (ஆசிரியர்), கு.வினிஸ்ரா, ந.சுஜீபா, சு.கிசானி, த.தேன்மதி, ப.ஜானுயா, க.கேனுகா, ச.சுபிதா இருப்பவர்கள் இடமிருந்து வலமாக திருமதி.பா.அமிர்தகுமார் (ஆசிரியர்), திருமதி.சு.சற்குணராஜா (ஆசிரியர்), அதிபர் ஓமந்தை மத்திய கல்லூரி, திரு.கு.சத்தியபாலன் (பிரதிக்கல்விப்பணிப்பாளர், வடமாகாணம்), திரு.சி.மனோகரன் (அதிபர்), திரு.ர.சிறிரமணன் (விளையாட்டுதுறைப் பொறுப்பாசிரியர்)  முன் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக இ.சிபிதா, பொ.குகதாரணி, மு.பாலசுமதி (அணித்தலைவர்), ,.கலைநிதி, த.தர்மலதா, அ.சோபிகா

யா-அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் மாகாணமட்ட வலைப்பந்து அணியினர் – 2014

17 vayathu ani17 வயதுப்பிரிவு முதலாம்; இடம் நிற்பவர்கள் இடமிருந்து வலமாக செல்வி.ந.யசோதா (ஆசிரியர்), வா.வனிதா, அ.அமுதினி, நா.தனுஷா, ஞா.அபர்ணா, த.கஜிதா, திருமதி. ப.லயந்தினி (ஆசிரியர்) இருப்பவர்கள் இடமிருந்து வலமாக திருமதி.பா.அமிர்தகுமார் (ஆசிரியர்), திரு.கு.பாலமுருகன் (உபஅதிபர்), அதிபர் ஓமந்தை மத்திய கல்லூரி, திரு.கு.சத்தியபாலன் (பிரதிக்கல்விப்பணிப்பாளர், வடமாகாணம்), திரு.சி.மனோகரன் (அதிபர்), திரு.ர.சிறிரமணன் (விளையாட்டுதுறைப் பொறுப்பாசிரியர்)  முன் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக கோ.யுனிஸ்ரா, ச.சோபிகா, கு.தேவஅனுசியா, சு.சர்வகுமாரி (அணித்தலைவர்), நா.ஜீவிதா

யா-அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் புலமைப்பரிசில் பரீட்சை-2014

scholarshipயா-அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றோர் மாணவர் விபரம் இடமிருந்து வலமாக திரு.சி.மனோகரன் (அதிபர்), இ,.ஹருஜன், விமதுரிஷா, ஜெ.பவிந்தா, யோ.டிலக்சிகா, திருமதி.சு.கெங்காதரன் (ஆரம்ப பிரிவு பகுதித்தலைவர்)

எதிரணியின் புதிய ஆட்சியில் நாட்டை காட்டிக் கொடுக்கமாட்டோம், எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். – சஜித்

imagesCA77XGN4எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. அவ்வாறு வெற்றி பெற்றதன் பின்னர் நாட்டையோ அரசாங்கத்தையோ நிர்வகித்த தலைவர்களையோ அல்லது படையினரையோ ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம்.
எதிரணி வெற்றி பெற்றவுடன் மீண்டும் சதி செய்து தனிநாட்டை உருவாக்கிக்கொள்ள முடியுமென்ற சர்வதேச புலிகள் கனவு காண்பார்களாயின் அது ஒரு போதும் நிறைவேறாது. Read more

வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்-

imagesஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சற்றுமுன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் பெறப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஐதேக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி போன்ற கட்சிகள் வாக்களித்த நிலையில் ஆதரவாக ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் வாக்களித்தன. பொது வேட்பாளருடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய எவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதன்படி வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தக சங்க ஒழுங்கமைப்பில் கொஸ்லாந்த உறவுகளுக்கு நிவாரண உதவிகள்- (படங்கள் இணைப்பு)

koslanda (95)வவுனியா வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் கொஸ்லாந்தை மீரியபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக நேற்று (22.11.2014) சனிக்கிழமை வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரி.எஸ்.இராசலிங்கம் தலைமையிலான குழுவினரால் மக்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது. முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் திரு.எஸ்.தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வர்த்தக சங்கத்தின் இயக்குனர் குழு உறுப்பினர் வாடி வீடு அதிபர் கதிர்காமராஜா(பூஸ்), புளொட்டின் நோர்வே கிளையின் அமைப்பாளர் திரு. சிவராசா இராசசிங்கம் (ராஜன்), கோவில்குளம் இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், கழக உறுப்பினர் திரு ந.தினேஷ் ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர். Read more