Header image alt text

வடமாகாண சபை 31சதவீத நிதியையே செலவு செய்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் 

veera01வடமாகாண ஆளுநர் அலுவலகமும், மூத்த பிரஜைகள் கழகமும் இணைந்து ஜனாதிபதியின் பிறந்தநாளில் முதியவர்களுக்கு உதவி பொருட்களை வழங்கும் நிகழ்வை நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தினர்.  இந்நிகழ்வில் கலந்துகொண்டு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில் அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 31 சதவீதமான நிதியையே வடமாகாண சபை இதுவரையில் செலவு செய்துள்ளது. ‘வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண சபை உருவாகுவதற்கு முன்னர் வடமாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்துவிட்டு மேலதிக நிதியை அரசாங்கத்திடம் கோருவார்.  வடமாகாண சபை உருவாகிய பின்னர் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. ஏனெனில், Read more

ஜனாதிபதிக்கு நல்லாசி சிறப்புப் பூசை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்

mk06ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது 69 பிறந்தநாளையொட்டி பிறந்த தினமான நேற்று அவருக்கு நல்லாசி வேண்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்றன. துரைச்சாமி குருக்கள் தலைமையில் விசேடமாக இந்துகுருமார்கள் வேதம் ஒதி ஜனாதிபதி அவர்களுக்கு நல்லாசி வேண்டி சிறப்புப் பூசைகளை முன்னெடுத்தனர். அத்துடன் துரைச்சாமிக் -குருக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து காளாஞ்சிகளையும் வழங்கி வைத்தார். இதன்போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஆகியோருடன் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகனன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஜனாதிபதியின் இந்துசமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் இராமச்சந்திரக்குருக்கள் பாபுசர்மாவும் உடனிருந்தார்.

mk02 mk06 mk09 mk10

நுவரெலியா   மாவட்டத்தில் 2,073 பேருக்கு 15 தற்காலிக முகாம்கள்

malyakamநுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 678 குடும்பங்களைச் சேர்ந்த 2073 பேர், இதுவரையிலும் தற்காலிக முகாம்களிலே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிறி தெரிவித்தார். நுவரெலியாவில் 218 குடும்பங்களை சேர்ந்த 341 பேர் – ஐந்து முகாம்களிலும், கொத்மலை பிரதேசத்தில் 190 குடும்பங்களை சேர்ந்த 741 பேர் – மூன்று முகாம்களிலும், வலப்பனை பிரதேசத்தில் 84 குடும்பங்களை சேர்ந்த 278 பேர் – இரண்டு முகாம்களிலும் ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் 39 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் – ஒரு  முகாமிலும், அம்பகமுவ பிரதேசத்தில் 147 குடும்பங்களை சேர்ந்த 587 பேர் -நான்கு முகாம்களிலும் இன்னும் சிலர்  தங்களது உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். மொத்தமாக 15 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2,073 பேருக்கான நாளாந்த உணவு, கிராமசேவகர்கள் ஊடாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தொடர்ந்தும் நுவரெலியா மாவட்டத்தின் காலநிலை சீரற்ற நிலையில் காணப்படுவதால், இவர்களை சொந்த வீடுகளுக்கு அனுப்பிவைப்பதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும், காலநிலை முற்றாக சீரடைந்த பின்னரே இவர்களை சொந்த வீடுகளில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குமாரசிரி குறிப்பிட்டார்.

பண்டைய கால பிரபுத்துவ முறை வேதனையளிக்கிறது – வாசுதேவ நாணயக்கார

malayakam1பெருந்தோட்டத்தில் பண்டைய கால பிரபுத்துவ முறை இன்னும் வழகிலுள்ளமை மனவேதனை அளிக்கின்றது என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் விநியோக சேவை தனித்தனியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்தார். கெயார் சர்வதேசம், இலங்கை மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவகம் இணைந்து ஒழுங்கு செய்திருந்த, ‘இலங்கை பெருந்தோட்ட சமூகத்தினரின் சேவை வழங்குதலை இலகுவாக்கல்’ தொடர்பான விளைவுகள் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களை பகிரும் நிகழ்வு கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்து பகிர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், Read more