Header image alt text

northern_provincial_council1வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது வடமாகாண அமைச்சர்கள் தொடர்பிலான குற்ற சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்க உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் பிரேரணை ஒன்றினை முன் மொழிய இருந்தார்.

அதற்கு சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் நீண்ட நேரம் வாத பிரதிவாதங்கள் நடைபெற்றன. அமைச்சர்களை விசாரணை செய்ய குழு நியமித்தால் அமைச்சர்களின் சிறப்புரிமை மீறப்படும். – சயந்தன்.

அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் கருத்து தெரிவிக்கையில் , Read more

போர்க்குற்ற விசாரணை: சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

fig-17போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவர்களா? என்பது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த பின்னர் தலைமை நிதிபதி ஸ்ரீபவன் இதனை அறிவித்தார்.

போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதுவரை இந்த தகவலை நிராகரிக்க தவறியுள்ளது.

எனவே, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் இது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனு மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அழைக்கப்பட்ட போது கருத்துக்களை தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், அந்த சட்டம் இதுவரை அமூல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

எனவே இந்த மனுவை முன்கொண்டு விசாரணை செய்ய முடியாதென்று கூறிய அரச தரப்பின் வழக்கறிஞர் அதனை தள்ளுப்படி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுப்படி செய்வதாக அறிவித்தனர்.

முன்னாள் போராளிகள் குறித்த சர்ச்சை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பதில்

current shockபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.

அவர்களுக்கு இவ்வாறு இரசாயன ஊசியை உடலில் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், இரசாயனம் கலந்த உணவுகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், புனர்வாழ்வு பெற்ற போராளிகளை சர்வதேசத்தின் உதவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இதனையடுத்து, நேற்றையதினம் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல் நிலையை சர்வதேச வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் குறித்த பிரேரணையினை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயா மாஸ்டர் பிணையில் செல்ல அனுமதி

dayamaster1விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் தான் சுற்றவாளி என தெரிவித்ததையடுத்து, நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்பிணையுடன், தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு அரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read more

money_trainசேலம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளிலிருந்து சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு, சேலத்திலிருந்து ரயில் மூலம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இவை அழிக்கப்படுவதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக 325 கோடி ரூபாய் பணம், 226 பெட்டிகளில் அடைக்கப்பட்டு சேலம் – சென்னை ரயிலில் ஏற்றப்பட்டது.
 
பணம் ஏற்றப்பட்டிருந்த பெட்டி, ரயில் எஞ்சினுக்கு அடுத்ததாக இணைக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னை வந்து சேர்ந்தது. காலை சுமார் 11 மணியளவில் பணத்தை இறக்குவதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் ரயில்வே காவல்துறையினரும் பணம் இருந்த சரக்கு பெட்டியைத் திறந்தபோது, அதன் மேலே ஓர் ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை போடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Read more

putin_erdoganரஷியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் சிரியாவில் உள்ள நெருக்கடியை சரி செய்வது குறித்து பொதுவான இலக்குகளை வைத்திருப்பதாகவும் மேலும் இரு நாடுகளின் கருத்துகள் ஒத்துப்போகாத பட்சத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானுடனான சந்திப்பிற்கு பிறகு புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளுக்குமான உறவில் சில மாதங்களாக விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு சமரசத்தின் வெளிப்பாடாக உள்ளாது. Read more

இலங்கையிலிருந்து வந்த இஸ்ரேல் பெண்ணிடம் இருக்கும் குழந்தை யாருடையது?

mother with childஇலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும்.

சோதனை எதிராக அமையுமானால், அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

book release02யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை விரிவுரையாளரும், சுயாதீன ஆராட்சியாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு என்ற நூலின் வெளியீட்டு விழா 06-08-2016 அன்று தமிழருவி த.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலா மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா தமிழ் சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ் நூல் வெளியீட்டு விழாவில் நூலின் முதற் பிரதியை பிரித்தானியா தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச்செயலாளர் கலாநிதி இரவீந்திரநாதன் அவர்கள் பெற்றுக்கொள்ள. தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். Read more

J 002பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வது என பல வாக்­கு­று­தி­களை சர்­வ­தே­சத்­திற்கு உறுதி­ய­ளித்­துள்ள போதும் அதனை நிறை­வேற்­றாது பின்­வாங்கி செல்­வது துர­திர்ஷ்­டமே என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் தெரி­வித்தார்.

அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யு­மாறு வலி­யு­றுத்தி அர­சியல் கைதி­களை விடுதலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பின் ஏற்­பாட்டில் யாழ்.நகரில் நேற்று நடத்தப்பட்ட கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.  அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில், Read more

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் புதையுண்ட வீடு

landslidநுவரெலியா மாவட்டம், கினிகத்தேனை பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நில அதிர்வின் போது, நிலம் தாழ் இறங்கியதன் காரணமாக மக்கள் குடியிருப்பொன்று மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.

கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் நிகழ்ந்த நில அதிர்வில், 50 – 60 அடி வரையில் நிலம் இறங்கியுள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் நான்கு வீடுகளிலும், நிலத்திலும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே, இங்கு வசித்து வந்த குடியிருப்பாளர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், பொது மக்களுக்கு சேதங்கள் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த பிரதேசத்தில், புதிதாக தனியார் மற்றுமோர் மின் உற்பத்தி மையமொன்றை ஆரம்பிப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கான சுரங்க பாதைகள் அமைப்பதற்கான மலைகள் வெடி வைத்து தகர்க்கப்படும் போது, இந்த நில அதிர்வு நடைபெறுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பமண்டல புயலால் மெக்ஸிகோவில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, 38 பேர் பலி

mexicoசனிக்கிழமை அன்று நாட்டின் கிழக்கு பகுதியை தாக்கிய ‘ஏல்’ என்ற வெப்பமண்டல புயலால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளாலும், வெள்ளப்பெருக்காலும் 38 பேர் இறந்துள்ளதாக மெக்ஸிகோ ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

புயெப்லா மாநிலத்தின் தொலைதூரக் கிராமத்திலும், அதற்கு அடுத்திருக்கும் வெராகுருஸிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மக்களின் வீடுகள் புதையுண்டதால் தான் அதிகமானோர் இறந்துள்ளனர். கரீபியன் பகுதியில் அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் முதல் வகை சூறாவளியான ஏல் பெலிஸியில் கரை கடந்தது.

32 தமிழர்களை விடுதலை செய்ய ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம்

andraசெம்மரங்களை வெட்டவந்ததாகக் கூறி ஆந்திர மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த 32 தமிழர்களும் சென்னையிலிருந்து திருப்பதிக்கு கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றபோது, ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

ரயிலில் பயணிகளாகச் சென்றவர்கள், வனம் தொடர்பான குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெயலலிதா, அவர்கள் எந்த வனப்பகுதிக்கும் அருகில் செல்லாதபோது, அவர்களை எப்படி இது தொடர்பாக குற்றம்சாட்ட முடியுமெனத் தெரியவில்லையெனக் கூறியிருக்கிறார்.

ஆகவே ஆந்திர முதல்வர் தலையிட்டு, 32 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் இதற்கென தமிழகத்தின் சார்பில் 2 வழக்கறிஞர்களை நியமிப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

மாசிடோனியாவில் பெய்த கனமழையால் பேரழிவு

macedoniaஆறு பேரை காணவில்லை. 20 பேர் காயமடைந்துள்ளனர
மாசிடோனிய தலைநகர் ஸ்காப்யேவிலும் அதன் சுற்றுபுறங்களிலும் பெய்த கடும் மழை மற்றும் பலத்தக் காற்றால் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருப்பதாக மாசிடோனிய காவல்துறை தெரிவித்துள்ளது

 

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

vigneshwaranஇலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் ஆகிய மூன்று விடயங்களில் கூடிய கவனம் செலுத்திட வேண்டும் என்று இன்று (ஞாயிற்றுக் கிழமை) யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் பி.லக்ஷ்மன், ரீ.வசந்தராஜா ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. Read more

இளைஞர்கள், யுவதிகள் வாக்காளர்ளுக்கான நிகழ்ச்சித் திட்ட நிகழ்வின் ஊடக அறிக்கை

18+ 067jpg2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அன்பிற்கும் நட்பிற்குமான இளைஞர் வலையமைப்பும் ஒன்றிணைந்து மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி எனும் பயிற்சியினைப் பெறுவோருக்கான வரவேற்பு நிகழ்வு மற்றும் ஆரம்பத்தில் பயிற்சியினை பெற்றுக் கொண்ட குழுவிற்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அதே போன்று   YOUTHVOTESL நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்தல் போன்ற செயற்பாடுகள் வவுனியாவில் மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்விற்காக வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வருகை தந்து தங்களினுடைய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். இந் நிகழ்விற்கான விசேட அதிதியாக வருகைதந்திருந்த உதவித் தேர்தல் ஆணையாளர் நாளக்க ரத்நாயக அவர்கள், இந்த நிகழ்வானது எமது YOUTHVOTESL  வேலைத்திட்டத்தின் ஆரம்ப தினமாகும் எனக் கூறினார் . 18 வயதியை பூத்தி செய்கின்ற இளைஞர்களில் ஒரு பகுதியினர் நிகழ்கால தேர்தல் வாக்காளர்களை பதிவு செய்யும் செயற்பாட்டின் போது அவர்கள் உள்வாங்கப்படாமையை கருத்தில் கொண்டு வாக்குப் பதிவினை ஒழுங்கு முறைப்படுத்தும் நோக்குடன்  YOUTHVOTESL வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் முறைக்கான சர்வதேச தேசிய அமைப்பு (IFES) போன்ற அமைப்புகளுடன் ஒன்றினைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. Read more