யாழ். சுன்னாகம் கந்தரோடை குளத்தடி ஞானவைரவர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று முற்பகல் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

இன்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் யோகாதேவி ரவிக்குமார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ் , ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.