ஐக்கிய நாடுகளின் சமய அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான அறிக்கையாளர் அஹமட் சஹீட் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்துக்கான உரிமைகளை இலங்கை எவ்வாறு மேம்படுத்தி வருகிறது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளார். Read more
எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலானது நாட்டில் உள்ள சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலக அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.
கடலில் தத்தளித்த இரண்டு வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். தெவுந்தர, தலல்ல கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினரும் கடற்படையின் நிவாரணப் பிரிவினரும் இணைந்து நேற்று இவர்களை மீட்டுள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதி, பூவரசங்குளம் பம்பைமடு இராணுவ முகாமிற்கு சற்றுத் தொலைவில் நோயாளர்களுக்கு பயன்படுத்திய வைத்தியசாலையின் கழிவுப் பொருட்களான சிறஞ்ச் மற்றும் சேலேன் போத்தல்களும் பாவிக்காத நிலையிலும் சில பொருட்களும் காணப்படுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குருமன்காட்டில் நேற்றிரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக ரங்கா, உதவி அமைப்பாளராக நவீந்திரன், நிர்வாகப் பொறுப்பாளராக தயா, உதவி நிர்வாகப் பொறுப்பாளராக கந்தசாமி,