Header image alt text

உயர் பதவிகள் குழுவினால் 13 புதிய தூதரகங்களின் தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள அல்லது நியமிக்கப்பட்டுள்ள நபர்களின் ஏற்புடைய தன்மையை ஆராய்வதற்கான பாராளுமன்ற உயர் பதவிகள் குழு (உயர் பதவிகள் குழு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக பரிந்துரை செய்யப்பட்ட பதின்மூன்று நபர்களை அங்கீகரித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த பதின்மூன்று புதிய தூதரகங்களின் தலைவர்களில், ஒன்பது பேர் இலங்கை வெளிநாட்டு சேவையைச் சேர்ந்த தொழில்முறை இராஜதந்திரிகளாவர்: ஏ.எஸ். கான் நைஜீரியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், யு.எல். முஹம்மத் ஜவுஹர் குவைத்திற்கான இலங்கைத் தூதுவர், Read more

கம்போடியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 12.55 மணியளவில் ஜனாதிபதி உட்பட குழுவினர் இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்போடியா அரசின் விசேட அழைப்பின்பேரில் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கை ஜனாதிபதி ஒருவர் கம்போடியா அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த முதல் முறை இதுவாகும்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, சபாநாயகர் கருஜயசூரிய தயாராக இருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில், சர்வதேசத்தாலும் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரையே தெரிவுசெய்யவேண்டும் என அவர் தெரிவித்தார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றினை ரஷ்யா முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க சமீபத்தில் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா சென்றிருந்தார்.

குறித்த விஜயத்தின்போது அடுத்த வருடமளவில் இலங்கை இராணுவத்தின் 70 வீரர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்தும், Read more

முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை கொக்குளாய், முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஐஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி பயணித்தபோது வீதியை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் சந்திப்பொன்று நடைபெற்றதே தவிரவும் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையோ உறுதிமொழிகளையோ வழங்கும் வகையில் அச்சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை எனவும்

புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் அது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று வருமானால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் அழைத்தால் அவர்கள் கண்காணிப்புக்கு வருகைதர அவசியமான காரணங்கள் குறித்து ஆராயும் பொருட்டே இந்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியை அமைக்க வேண்டும் என கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்காக, ஜனநாயக தேசியக் கூட்டணியை வெகுவிரைவில் அமைக்க வேண்டும் என தாமும், பிரதமரும் இணங்கியதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமைச்சர் சஜித் பிரேமதாஸவே தங்களது வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் என்று தான் கருதுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு நிரந்தர நீதாய நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றம் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிடியாணையை ஆங்கிலத்தில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் கொச்சினுக்கு இடம்பெறும் விமானசேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் 11 ஆம் திகதி வரை இந்த விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கும் என, ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விவரங்களை 00914842362042 என்ற ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கொச்சின் நகர காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும். Read more