ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஏழாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய 25,000/- நிதியில் திருகோணமலை, பாலையூற்றைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழுள்ள தெரிவுசெய்யப்பட்ட பத்து மாணவர்களுக்கு இன்று (30.04.2023) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
தலைவர்,
X-Press Pearl கப்பலால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக சட்ட மா அதிபருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அசேல B.ரெக்கவ குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கிய அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் கிடைக்காவிடில் அது தொடர்பில் தமது அமைச்சிற்கு தெரியப்படுத்துமாறு உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் அடிப்படை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவை உரிய வகையில் வழங்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஏழாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய 25,000/- நிதியில் நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை ஆக்ரா தோட்டத்து அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு இன்று (29.04.2023) விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.
சீனாவின் நிதியுதவியின் கீழ் கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக புதிய வீடமைப்பு திட்டங்களை நிர்மாணிக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. 450 மில்லியன் டொலர் நிதியுதவியை சீனா இதற்காக வழங்கவுள்ளது. கொழும்பின் 5 இடங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் W.S. சத்யானந்த தெரிவித்தார்
வவுனியா – வெடுக்குநாறி மலையில் மீண்டும் விக்கிரகங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலய நிர்வாகத்தினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். மாவட்ட தொல்பொருள் திணைக்களத்தினரும் நெடுங்கேணி பொலிஸாரும் வெடுக்குநாறி மலைக்கு சென்றிருந்தனர். சிவலிங்கம், அம்மன், முருகன், பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் உள்ளிட்ட விக்கிரகங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.
வவுனியா கந்தபுரத்தைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழுள்ள நான்கு மாணவர்களுக்கு இன்று 10,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன. கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் இரா.தயாபரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் இடம்பெற்ற மேற்படி உதவி வழங்கும் நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் இரா.அந்தோனிப்பிள்ளை (கொன்சால்) அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த விசேட நிபுணர்களின் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமைச்சின் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது.