மலையகம் – 200, இலங்கை மண்ணில் கால் பதித்த காலம் முதல், தமது அடிப்படையான வாழ்வுரிமைக்காக, கடந்த இருநூறு வருடங்களாக போராடி வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றை அலசி ஆராய்ந்து அதில் பாடங்களைக் கற்றுக் கொண்டு, நிரந்தரமான தீர்வுக்கான பாதையை உருவாக்க துடிக்கும் அடையாள வார்த்தை.
X-Press Pearl கப்பல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கியதால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளுக்காக நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று(25) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
26.04.1977இல் அமரத்துவமடைந்த தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.