கல்விழான் காந்திஜி சனசமூக நிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு உதவி-

kalvilanயாழ். சுழிபுரம் கல்விழான் காந்திஜி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு நேற்று (07.12.2014) ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்படடுள்ளன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய மாகாணசபை நிதியொதுக்கீட்டில் இருந்து ரூபாய் 20,000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. மேற்படி விளையாட்டு உபகரணங்களை புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கல்விழான் காந்திஸி சனசமூகநிலைய விளையாட்டுக் கழகத்தினருக்கு வழங்கிவைத்தார்கள்.

இளையநட்சத்திர விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு-

inpachcholai (4)inpachcholai (1)inpachcholai (3)யாழ். வட்டு வடக்கு இளையநட்சத்திர விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று(07.12.2014) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக 25,000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் சார்பாக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இதில் கலந்துகொண்டிருந்ததுடன், புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் மேற்படி விளையாட்டு உபகரணங்களை வட்டு வடக்கு இளையநட்சத்திர விளையாட்டுக் கழகத்தினரிடம் கையளித்தார்கள்.

திசைமழை கண்ணகியம்மன் ஆலய திருப்பணிக்கு சித்தார்த்தன் அவர்கள் உதவி-

kannagai amman kovil (2) kannagai amman kovilயாழ். சுழிபுரம் கிழக்கு திசைமழை கண்ணகியம்மன் கோவில் புனருத்தாபன நிதியாக ஒரு லட்சம் ரூபாய் நேற்று (07.12.2014) ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் மாகாண சபை நிதியொதுக்கீட்டில் இருந்து மேற்படி ஒரு லட்சம் (100,000) ரூபாய் இவ் ஆலயத் திருப்பணிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நிதிக்குரிய காசோலையினை புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திசைமழை கண்ணகியம்மன் ஆலய அறங்காவலர் சபையினரிடம் நேற்றையதினம் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும், ஆலய அறங்காவலர் சபையினரும் பங்கேற்றிருந்தனர்.