ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று (14) உரை நிகழ்த்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இலங்கை தொடர்பில் நேற்று (13) முன்வைத்த கருத்துக்களுக்கு வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் இதன்போது பதிலளிக்கவுள்ளார்.

உணவு பாதுகாப்பிற்காக ஓகஸ்ட் 30 ஆம் திகதி இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை, சிவில் செயற்பாடுகளில் இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும் செயல் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காணொளி தொழில்நுட்பத்தினூடாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பதிலளிக்கவுள்ளார்.