மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள், தேவைகள் குறித்து ஆராய்வு-
03.12.2014 அன்று வலி மேற்கின் பல பகுதிகளிலும் பெய்த கடும் மழைகாரணமாக மக்கள் பலரும் தமது குடியிருப்புக்களை விட்டு இடம்பெயாந்து அல்லல்படட்னர் இவ் வேளை முளாய் பகுதியிலுள்ள அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை காட்டுப்புலம் பாடசாலை, இன்பச்சோலைப் பகுதி மற்றும் அராலி ஐயனர் கோவில் பகுதிகளில் இந்த மக்கள் தஞ்சம் புகுந்தனர் இவ் நிலைமையை உடனடியாக வலிமேற்க பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரனுக்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து உடனடியாக தவிசாளர் அவ் விடத்திற்கு வருகை தந்து மக்களின் அடிப்படை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இவ் விடயம் குறித்து அறிந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ன உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் உடனடியாக மக்கள் தஞ்சம் அடைந்த இடத்திற்கு வருகை தந்தார். அவருடன் புளொட்டின் நோர்வே கிளை அமைப்பானர் திரு இராசசிங்கம் சிவராசா (ராஜன்) அவர்களும் வருகை தந்திருந்தார் இவ் நிலையில் அப்பகுதி கிராம சேவகர் சிறிரஞ்சன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களும் வந்திருந்தனர். இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களுடைய தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்கள்.




அதிக மழையினால் மக்கள் பாதிப்பு, உதவி வழங்குமாறு கோரிக்கை-
கடந்த 1ம் திகதி முதலாக மிக அதிகமான மழை பெய்து வரும் மழைகாரணமாக பல பகுதிகளிலும் மக்கள் பாதிப்புக்கு உட்பட்டனர் இவ் நிலையில் வலி மேற்கு பிரதேசத்திலும் காணப்பட்டது இவ் நிலையில் மக்களை அனர்தப் பாதிப்பில் பாதுகாக்கும் பணியில் வலி மேற்கு பிரதேச சபையினர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தினர் இணைந்து மக்கள் பணியில் ஈடுபட்டனர். இவ் பணியில் பிரதேசத்தின் சகல பகுதிகளுக்கும் சென்று தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் மக்களுக்கான உதவும் பணிகளில் ஈடுபட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியான உதவிகளை உடன் வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளருக்கு கோரிக்கை வித்துள்ளார்
கனகரத்தினம் வீதி செப்பனிடல், ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு-
மிக நீண் காலமாக செப்பனிப்படாது இருந்த வட்டுக்கோட்டை கனகரத்தினம் வீதி வட மாகாண முதமைச்சர் நிதி ஓதுக்கீடடினால் வலி மேற்கு பிரதேச சபையின் கீழ் புனரமைப்பு செய்யப்படுகின்றது மேற்படி வேலைத் திட்டத்ததினை வட்;டு தென் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினூடாக மேற்கொள்ளப் படுகின்றது மேற்படி வேலைத் திட்டத்தினை வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் நேரடியாக நின்று நெரடியாக நின்று வழிப்படுத்தி வருவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.இவ் வேலைத் தி;ம் தொடர்பில் வட்டு தென் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரையே கண்காணிப்பு குழுவாக நியம்க்கப்படுள்ளனர். வலி மேற்கு பிரதேசத்தில் நடை பெறும் வேலைகள் தொர்பில் கண்காணிப்பு குழுவை தவிசாளர் நியமித்து வருவது நடை முறையில் உள்ள விடயம் ஆகும் 05.12.2014 அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்தி அவர்களது பன்முகப்படுதப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா.50000 ஓலி பெருக்கி சாதனங்கள் வட்டுக்கோட்டை மாவடி அடைக்கலம் தோட்ட கந்தசுவாமி கோவில் நிர்வகத்திடம் ஒப்படைத்தார்.
02.12.2014 அன்று மிக அதிக மழை காரணமாக வலி மேற்கின் பல பகுதிகளிலும் உள்ள குடியிருப்புக்களுக்குள்; வெள்ளம் புகுந்து கொண்டது. இதற்கும் மேலாக பல ஏக்கர் கணக்கான விவசாய நிலம் பாதிக்கப்பது. இவ் நிலையில் சங்கானை மற்றும் அராலி பகுதி விவசாய சம்மேளனங்கள் மேற்படி நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டி இப் பிரதேசத்திலுள்ள வான் கதவுகளை திறக்குமாறு சங்கானை பிரதேச செயலகத்திற்கு கோரிக்கை விடுத்தனர் இவ் நிலையில் மாலை வரை வான் ககதவுகள் திறக்கப்படா நிலையில் மேற்படி கதவுகளை மக்கள் தாமாகவே திறக்க முட்படனர் இவ் வியம் பற்றி வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கட்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தவிசாளர் மக்களின் நலன் கொண்டு சம்பவம் பற்றி உடனடியாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் நீர் பாசன பெறியியலாளருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து உடனடியாக வான் கதவுகள் திறக்கப்பட்டு மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய காணிக்ள் பாதுகாக்கப்பட்டது.


எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை, ஆதரித்து 140 பிரதான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பிரதான கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பிரதான கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பொதுவேட்பாளரின் முதலாவது பிரசாரக் கூட்டம் கடந்த 30ஆம் திகதி பொலனறுவையில் இடம்பெற்றது. இந்நிலையில், வடமத்திய மாகாணத்தை குறிவைத்து மகிந்த ராஜபக்சவின் முதலாவது பிரசாரக் கூட்டமும் எதிர்வரும் 11 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.