மாதகல் புனித தோமையர் தேவாலய மாலைநேரப் பள்ளிக்கு கட்டிடம் அமைப்பு- (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம், மாதகல் புனித தோமையர் தேவாலய வளாகத்தில் மாலைநேரப் பள்ளியினை நடாத்துவதற்கு ஒரு கட்டிடம் இல்லாத நிலைமை இருந்தது. இந்த மாலைநேரப் பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்திற்கான நிதியுதவியாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான தனது நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிதியினைக் (100,000) கொடுத்து மேற்படி முன்பள்ளிக்கான கட்டிட வேலைகளை ஆரம்பித்து வைத்தார். இந்த நிதியுடனும், மாதகலைச் சேர்ந்த வெளிநாட்டு அன்பர்களின் நிதியுதவியுடனும் மேற்படி முன்பள்ளியின் கட்டிட வேலைகள் இடம்பெற்று தற்போது பூர்த்தியடைந்துள்ளன. Read more
யாழ். ஆனைக்கோட்டை மூத்த பிரஜைகள் சங்கத்திற்கு தண்ணீர் தாங்கி அமைத்துக் கொடுப்பதற்காக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நிதியுதவியை வழங்கியுள்ளார். மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து இதற்குரிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த பிரஜைகள் சங்கத்தின் தலைவர் திரு. பொன்கலன் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (20.12.2014) நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
வட்டுக்கோட்டை அரசடி வீதியானது பன்நெடுங்காலமாக திருத்தப்படாத நிலையில் காணப்பட்து. இவ் நிலை தொடர்பில் அப்பகுதி அம்பாள் சனசமூக நிலையத்தினர் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கட்கு அறியத்தந்ததனைத் தொடர்ந்து தவிசாளர் இவ் விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட நாhடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ.சரவணபவன் அவர்கட்கு அறியத்தந்தனைத் தொடர்ந்து பன்முகப்படுத்தப்படட்ட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக ரூபா 100000 ஒதுக்கீடு செய்யப்பட்டது இவ் நிலையில் அப் பகுதி வீதி புனரமைக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் தவிசாளர் மேலும் ஏறத்தாள 3இலட்சம் ரூபா ஒதுக்கீட்டினை பிரதேச சபைக்கூடாக மேற்கொண்டு இவ் வீதி முழுமையாக செப்பனிடப்படுகின்றது. இவ் விடயம் தொடர்பில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் அழைப்பில் 21.12.2014 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு வீதி வேலைத் திட்த்தினை பார்வையிட்டதற்கு மேலாக மக்களின் வேண்டுகோள்களையும் கேட்டறிந்து கொண்டார். இவ் நினகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ந.பி.ரஜ்குமார், சசிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்
18.12.2014 அன்று அராலி பகுதியில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளை அப் பகுதி மக்களுக்கு வழங்குவது தொர்பில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் அப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினார் இதேவேளை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்குரிய உள்ளுராட்சி வார நிகழ்வுகள் 21.12.2014 அன்று வலி காமம் மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகம் முன்பாக வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் மற்றும் துவிச்சக்கரவண்டி ஓட்டம் என்பன இடம் பெற்றது. தொடர்ந்து உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் கரப்பந்தாட்டம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.