Header image alt text

மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி உதயம்-

tamil mutpokku koottaniமலைய மக்களின் அபிவிருத்தி, அரசியல் நலன்களை காக்கும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி என்பன இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் தலைவராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதி தலைவர்களாக பழனி திகாம்பரம் மற்றும் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளராக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ், பொருளாளராக தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் திலகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டணி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இன்று இடம்பெற்றது.

Read more

இலங்கையில் நல்லாட்சியை வலுப்படுத்த அமெரிக்கா ஒத்துழைப்பு-

americanஇலங்கையில் வலுவான ஆட்சியை ஏற்படுத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக இலங்கையின் சட்டம் மற்றும் பொருளாதாரத் துறையை வலுப்படுத்த அமெரிக்க உதவி புரியும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலர் ரிச்சாட் ஈ.ஹோக்லன்ட் தெரிவித்துள்ளார். ஜனநாயக தேர்தல் மாற்றம் இலங்கை மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும், பிரிவினை அரசியல் மற்றும் போலி முதலாளித்துவத்தில் இருந்து இலங்கையை மாற்றி நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் இந்த புதிய பாதை நோக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாகவும் சட்டம், பொருளாதாரம் உள்ளிட்ட ஆட்சித் துறையை வலுப்படுத்த உதவி அளிக்கும் என்றும் ரிச்சாட் ஈ.ஹோக்லன்ட் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற தாக்குதல் சம்பவம், விளக்கமறியில் நீடிப்பு-

ereயாழ். நீதிமன்றம்மீது கடந்த 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 43 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜே.கஜநிதிபாலன், உத்தரவிட்டுள்ளார். யாழ்.நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ்.நகரில் அமைந்துள்ள பொலிஸ் காண்காணிப்பகத்தை தாக்கியமை, வீதிகளில் ரயர் எரித்தமை மற்றும் வீதிச் சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த 47பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, இருவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மிகுதி 45பேரும் எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று ஒரு பிரிவான 43பேர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் திஸ்ஸவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை-

tissa atanaikeமுன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என போலி ஆவணமொன்றை வெளியிட்டமை தொடர்பிலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதிவரை ஒத்திவைப்பு-

parliamentநாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்றுகாலை 9.30க்கு கூடியது. விசேட அமர்வை நடத்துவதற்கு நாடாளுமன்றம் கூடப்பட்டநிலையில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அவை நடவடிக்கை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்;டது. இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் தீர்மானம் எதுவும் எட்டப்படாததையடுத்தே நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பிரபல பாடசாலையில் சடலம் மீட்பு-

45555கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையின் நீச்சல் தடாகத்திலிருந்து 55 வயதான ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலேயே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்லூரியின் பழைய மாணவரான நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளன்.

பண மோசடியில் ஈடுபடுபவர்கள் பற்றி முறைப்பாடு செய்ய நடவடிக்கை-

employmentதென்கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக எவருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வலியுறுத்தியுள்ளது. தகைமைகளை பூர்த்திய செய்தவர்களில் தெரிவு செய்யப்படும் சிலருக்கு மாத்திரமே தென்கொரியாவில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார். இந்த தெரிவு தென்கொரிய அரசாங்கத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகிறது. தொழில் வாய்ப்புக்களுக்கு தகுதியானவர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையுடன் இலங்கையர்கள் தொடர்புபடுவதில்லை. தென்கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக தெரிவித்து பணம் வசூலிப்போர் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வையுங்கள் என்று பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மக்களைக் தெரிவித்துள்ளார். 0112 879900 அல்லது 0112 879902 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவில் இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

வலிமேற்கு திருவடிநிலைப் பகுதி சுற்றுலாவுக்குரிய பிரதேசமாக முன்மொழிவு-

dfddfdவலி மேற்கு பிரதேசத்தின் திருவடிநிலைப் பகுதியில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையிலான உத்தியோகஸ்தர்கள் குழவினர் குறித்த பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக்கும் பொருட்டு அண்மையில் சென்று பார்வையிட்டுள்ளனர். இவ் விடயம் தொடர்பாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கூறும்போது, 5 ஆண்டுத் திட்டத்தில் குறித்த பிரதேசம் சுற்றுலாவுக்குரிய பிரதேசமாக முன்மொழியபபட்டுள்ளதாகவும் இப்பிரதேசத்தில் இவ்வாறான நிலை அமையுமாயின் இப்பகுதி மிகச் சிறப்பாக மாற்றமடையுமெனவும் கூறினார்.

பாகிஸ்தான் இராணுவத்தளபதி இலங்கைக்கு விஜயம்-

pakistan...பாகிஸ்தானிய இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கான விஜயம் செய்யவுள்ளார். இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல கிருஷாந்த டீ சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் இங்கு வருகைதரவுள்ளார். 5 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு ராஜாங்க செயலாளர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, உட்பட பாதுகாப்பு தளபதிகளை சந்தித்து உரையாடுவார் என கூறப்படுகின்றது. இந்நிலையில், இராணுவ பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஜென்ரல் ரஹீல் ஷரீப்பின் தந்தையார் இரண்டாவது உலக மகா யுத்தத்தில் பங்கு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, அவரது சகோதரர்கள் இருவர் பல யுத்த முனைகளில் கடமையாற்றி பல விருதுகளை பெற்றவர்களாவர்.

கொக்காவில் பஸ் விபத்தில் நால்வர் பலி 35 பேர் படுகாயம்-

kokkavilகிளிநொச்சி பழைய முறிகண்டி கொக்காவில் – பனிக்கன்குள பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துளள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பழைய முறுகண்டி கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ஒன்றின்மீது மோதிய பஸ், கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50வயதான ஜெகநாதன் உதயஜோதி மற்றும் 29வயதான தோமஸ் சாள்ஸ் நெரஞ்சன் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், 21பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது

மன்னார் விபத்தில் பெண் உயிரிழப்பு, மலையகத்தில் இரு விபத்துகள்-

mannar accidentமன்னாரில் நடைபெற்ற திருமண வைபவத்துக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சிறிய ரக லொறி, மன்னார் பாலத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பலியானதுடன் 8பேர் படுகாயமடைந்துள்ளனர் என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மலையகத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற பஸ் மற்றும் கெப் வாகன விபத்துகளில் 28பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பஸ்ஸொன்று நேற்று இரவு, பெரகல, பிளக்புட் பகுதியில் வீதியை விட்டு கற்பாறையொன்றில் மோதியதில் 20பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, கதிர்காமத்திலிருந்து நுவரெலியா நோக்கிசென்ற கெப் வாகனமொன்று இன்று அதிகாலை வெலிமடை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் படுகாயமடைந்துள்ளனர் இவ்வாறு காயமடைந்தவர்களில் இரு குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு-

suicideவவு­னியா புதிய வேலர் சின்­னக்­கு­ளத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமி ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது. வவு­னியா பன்­றிக்­கெய்தகுளம் பாட­சா­லையில் கல்வி கற்கும் 14 வய­து­டைய ஜெ. பவித்­திரா என்­ப­வரே அவ­ரது வீட்­டிற்குள் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார். தாய் அண்­மையில் அரபு நாடொன்றில் இருந்து இலங்கை திரும்­பி­யி­ருந்த நிலையில் மீண்டும் அரபு நாட்­டிற்கு செல்ல பொலிஸ் நிலை­யத்தில் சான்­றி­த­ழொன்­றினை பெற சென்றிருந்த சம­யமே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளதென பிர­தேசவாசிகள் தெரிவிக்­கின்­றனர். இச்சம்­பவம் தொடர்­பாக ஓமந்தை பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டுள்ளனர்.

சீன கப்பல் விபத்துக்குள்ளானதில் 100ற்கும் அதிகமானவர்கள் மாயம்-

ffgfசீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கியதையடுத்து, நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது கடும்புயலில் சிக்கி ஹ_பி பகுதியில் உள்ள யாண்ட்சே நதியில் மூழ்கியது. இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்த 20 பேரை உயிருடன் மீட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லையென சின்குவா என்ற சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேதனை மிகுந்த வித்தியாவின் கொடூரக் கொலையை வைத்து அரசியல் செய்வது மிகக் கேவலமானதாகும்-

67676வித்தியாவின் கொடூரமான படுகொலை ஒட்டுமொத்த மனித இனமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவம். இதில் மற்றவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, எங்களுக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லிவிட்டு நாம் தப்பிக் முடியாது. இந்த ஈனச் செயலை செய்தது எம்மினத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை வெட்கத்துடன் ஓத்துக் கொள்ளவேண்டும். முன்பு இடம்பெற்ற இதே போன்ற பாலியல் பலாத்காரம், வன்புணர்வு மற்றும் படுகொலைகளில்; ஈடுபட்டவர்களுக்கு முறையான தண்டனை கிடைக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தில் குற்றஞ் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் முக்கிய பிரமுகர்கள் துணையுடன் கொழும்பிற்கு தப்பி ஓடிவிட்டார். எப்படியோ பொலிசார் அவரை கைது செய்துவிட்டார்கள். இவ்வாறான சம்பவங்களினால் ஆத்திரம் அடைந்த மக்கள், நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற எல்லை மீறிய ஆதங்கத்தின் வெளிப்பாடே நீதிமன்றத்தின் மீது நடந்த விரும்பத்தகாத சம்பவம். அதற்கு அரசியல் சாயம் பூசுவதோ, புலிச்சாயம் பூசுவதோ வெட்கக் கேடான விசயம்,

Read more

மாணவி கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு-

pungudutive caseபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 9 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன், கொலை வழக்கு தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆகியோர் செய்யவேண்டிய செயற்பாடுகள் தொடர்பான கட்டளைகளைப் பிறப்பித்த நீதவான், சந்தேகநபர்கள் விரும்பினால் அடுத்த தவணையில், அவர்கள் சார்பில் ஆஜராவதற்கு சட்டத்தரணிகளை பயன்படுத்துவதற்கும் அனுமதியளித்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மாணவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா தலைமையில் ரி.ஜனகன், எஸ்.விஜயராணி, ஆ.கார்த்திகா, அம்பிகா சிறிதரன், கே.சுபாஷ் ஆகிய 6 சட்டத்தரணிகள் குழு ஆஜராகியது. சந்தேகநபர்களிடமிருந்து பெற்ற வாக்குமூலங்களை பொலிஸார், நீதவானிடம் சமர்ப்பித்தனர். அத்துடன், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தலைமுடிகளையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதன்போது, ‘ஏதாவது கூறவிருக்கின்றீர்களா?’ என சந்தேகநபர்களிடம் நீதவான் விசாரித்தபோது, ‘தங்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறியதுடன், சந்தேகநபர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று தான் வெள்ளவத்தையில் இருந்ததாகவும் வெள்ளவத்தையிலுள்ள வங்கியொன்றின் ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் பெற்றுக்கொண்டதாகவும் கூறியதாக’ பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். Read more

யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட 34ம் ஆண்டு நினைவுதினம்-

fgffஇன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 34ம் ஆண்டு நினைவு தினமாகும். 1981ம் ஆண்டு ஜூன்மாதம் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார். தென்னாசியாவிலேயே மிகவும் பெரியதும் 98,000ற்கும் அதிகமான புத்தகங்களையும், தேடற்கரிய கையெழுத்து பிரதிகளை உடையதுமான யாழ். பொதுநூலகம் மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு குற்றச்செயலாகவும், பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்நிகழ்வு ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 20ஆம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகவும் இது கருதப்படுகிறது. 1996ம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். நூல்நிலையத்தை மறுநிர்மாணம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புளொட், அமைப்பினரும், சில தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் பிரமுகர்களும் இப்பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர். யாழ். பொது நூலகத்தை மறுநிர்மாணம் செய்வதற்கு பாடுபட்டவர்கள் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்களே.

34ஆவது ஆண்டு நிறைவு நாள்-

mrs ainkaran (7)தழிழினத்தின் வரலாற்றில் இன்றைய நாள் என்றும் மறக்கவோ மறைக்கவோ முடியாத நாள் 1981ம் ஆண்டின் வைகாசி 31ம் நாள் நள்ளிரவில் யாழ் நகரில் எங்கள் அறிவுக்கருவூலம் கருவறுக்கப்பட்டு கடையச் செருக்கர்களால் தழிழினத்தின்மீது பண்பாட்டுப் படுகொலை நிறைவேற்றப்பட்ட நாள். எமது இனத்தின் தனிப்பெருமையே கல்வி. அந்த கல்வியின் அடித்தளம எங்கள் யாழ்ப்பாண நூலகம். எங்கள் கல்வியின் தனிப்பெரும் தன்மையினை தாய் மண்ணில் அழித்திட அரக்கர் உருவத்தில்; அரசியல் வழிகாட்டலில் காடைத்தனம் நிறைவேற்றப்பட்டு கல்விக் கருவூலம் சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட சாம்பலின் சிதறல்கள் எங்கள் இளைய இனத்தின் வலிகள் ஆக்கப்பட்டது அந்த வலிகளையே வரிகள் ஆக்கிய வேங்கைகள் காலத்;தினால் காடையர்களுக்கு இதுவே எமது இனத்தின் வீர வரலாறு என பாடம்புகட்டிய வரலாறுகள் பல. அழித்த கருவூலத்தின் நினைவுகளையும் வரலாற்றின் நிகழ்வுகளையும் என்றும் மனதில் கொண்டவர்களாக மீண்டும் என்றே எமது உரிமை பெறுவோம் என உறுதிபூண்டு. நினைவுகளுக்காக பிரார்த்திப்போம்.
என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன்,
தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை

இந்தியாவில் வெயிலின் கொடுமை, உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

fgfஇந்தியாவில் நிலவும் கடும் வெப்ப காலநிலை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 248ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒரிசா மாநிலங்களில் வெப்பம் காரணமாக அதிகளவிலானோர் பலியாகியுள்ளனர். நிலவும் அதிக வெப்பம் காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு மக்கள் பலியாகிறார்கள். ஆந்திர பிரதேசத்தில் வெப்பம் தாளாமல் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 677 ஆக உயர்வடைந்துள்ளது. ஒரிசா, குஜராத், ராஜஸ்தான், மற்றும் டெல்லியிலும் பலர் கடும் வெப்பத்தால் பலியாகியுள்ளனர். பகல் நேரங்களில் மக்கள் வெளியில் வரவேண்டாம் என மாநில அரசுகள் எச்சரிக்கை விடும் அளவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மே மாதம் இறுதியில் வெயில் கொடுமை குறையும் என எதிர்பார்ப்பதாக வானிலை தெரிவித்தது. ஆனாலும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.