Header image alt text

அமெரிக்க மருத்துவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம்-

american doctorsஅமெரிக்கா, இலங்கை நாடுகளுக்கிடையில் நட்புறவு ரீதியான ஒற்றுமையினை வலுப்படுத்தும் முகமாக இன்று அமெரிக்காவின் 40 பேர் கொண்ட விசேட மருத்துவக் குழுவினர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த குழுவினர் ஐந்து நாட்களுக்கு யாழ். குடாநாட்டில் தங்கியிருப்பதுடன் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் நடமாடும் மருத்துவ சேவையிலும் கலந்து கொள்ளவுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளலாய் இடைக்காடு மகாவித்தியாலத்தில் இன்றுகாலை இடம்பெற்ற நடமாடும் மருத்துவ முகாமில் இந்த விசேட மருத்துவ குழுவினர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விசேட சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். குறித்த நடமாடும் சேவையில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி, மற்றும் பாதுகாப்புப் படைத்தலைமையக அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். எதிர்வரும் நாட்களில் ஊர்காவற்துறை, வேலணை, நெடுந்தீவு, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும் குறித்த குழுவினர் சென்று அங்குள்ள மக்களுக்கும் நடமாடும் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமாலை நிலக் கண்ணிவெடி வெடிப்பில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்-

minesகிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வெடிப்புச் சம்பவங்களில் கண்ணிவெடி அகற்றும் பெண் பணியாளர் படுகாயமடைந்தததோடு, மற்றொரு சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் பலியாகியுள்ளார். முகாமலையில் ஆபத்து மிக்க செறிவான கண்ணிவெடி உள்ள பிரதேசத்துக்குள் கடந்த 12ஆம் திகதி சென்ற கிளாலியைச் சேர்ந்த 39 வயதான பத்திநாதன் சுதாகரன் என்பவர் உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். கண்ணிவெடி அகற்றப்படாத குறித்த பிரதேசத்துக்குள் சென்று வெடிப்பொருட்களை எடுத்து அதன் மருந்தை பிரித்தெடுத்து விற்பனை செய்யும் நோக்கில் இவர் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் இறந்த பகுதிக்கு டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு 29 வரையான ரங்கன் ரக கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரே இறந்தவரின் உடல் மீட்கப்பட்டது. இதன்போது அவரின் உடலின் அருகில் 15 வரையான கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் இருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரை காணவில்லை என அவரது மனைவி, 13ம்திகதி பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் நேற்று சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முகமாலை பகுதியில் கடந்தவாரம் இடம்பெற்ற பிறிதொரு சம்பவத்தில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த 45 வயதான கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த எஸ்.மகேஸ்வரி என்பவர் படுகாயமடைந்து யாழ். போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். குறித்த பெண், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவருடைய ஒரு கண் முற்றாக இழந்த நிலையிலும் ஒரு கண் பாதிக்கப்பட்ட நிலையிலும் காலில் மிகப்பெரும் காயத்துடனும் மீட்கப்பட்டிருந்தார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை-

chandrikaமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக, சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்து ள்ளார். யுத்தத்திற்காக தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ததில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிதி மோசடி செய்துள்ளதாக, நேற்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்து வெளியிட்டிருந்தார். இந்த அபகீர்த்தியான கருத்துக்கு எதிராகவே இவ்வாறு கடிதம் அனுப்பவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இது குறித்து தான் கோட்டாபயவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கம்மன்பில கூறியுள்ளார். அத்துடன், எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அந்த குற்றத்தை கோட்டாபயவின் மீது சுமத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அந்த இராணுவத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோட்டாபயவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட வேளை, இரசாயன ஊசி போடப்பட்டதாக கூறிய விக்ரமபாகு கருணாரத்னவைக் கைதுசெய்ய வேண்டும் எனவும், உதய கம்மன்பில இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச மீண்டும் கைது-

namalபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். இந்நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை றக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை 11ம் திகதி, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 18ம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கொன்றில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நான்கு அமைச்சுக்களுக்கு பணிப்பாளர் நாயகங்கள் நியமனம்-

sri lankaஉடன் அமுலுக்கு வரும் வகையில் 4 அமைச்சுக்களுக்கு நிதி மற்றும் கணக்குகள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகங்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக நிதி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவைப் பத்திரமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுகாதாரம், கல்வி, பெருந்தெருக்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கு நிதி மற்றும் கணக்குகள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகங்கள் நியமிக்கப்படவுள்ளன. இலங்கை கணக்காளர் சேவையிலுள்ள தொழிற் தகைமையுடைய கணக்காய்வாளர்கள் இவ்வாறு நியமிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க அறிவித்துள்ளார். ஒரு வருடத்துக்கு 100 பில்லியன்களுக்கு அதிகளவில் செலவு செய்யும் அமைச்சுக்களுக்கு நிதி மற்றும் கணக்கு தொடர்பான பணிப்பாளர் நாயகங்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை சுகாதார அமைச்சுக்கு மேலுமொரு பணிப்பாளர் நாயகத்தை நியமிக்கும் தீர்மானத்திற்கு சுகாதார பணிப்பாளர் பாலித மகிபால உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாலித மகிபால ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். சுகாதார அமைச்சுக்கு நிதி விவகாரத்திற்கென புதிய பணிப்பாளர் பதவி அவசியமில்லையெனவும் இது தொடர்பாக கலந்துரையாட நேரமொன்றை ஒதுக்கி தருமாறும் அவர் ஜனாதிபதிக்கு கடிதம்மூலம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ திடீர் மரணம்-

former justiceஉயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ, தன்னுடைய வீட்டில் வைத்து இடம்பெற்ற விபத்தொன்றினை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூ, தன்னுடைய வீட்டின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து, களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலைக்கு எடுத்துவரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரியவருகின்றது. தனது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சரத் அப்றூவுக்கு, கடந்த ஜனவரி மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமர் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் சந்திப்பு-

ranilசீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு இன்றுமாலை இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர், அந்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளை நேற்று மாலை கண்காணித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் சீன பாசிசவாதத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்ததாக கருதப்படும், ஸ்ட்ப்வெல் அருங்காட்சியகம் மற்றும் சீனாவின் முதலாவது பிரதமரான ஜூ என்லாயின் வீடு மற்றும் அலுவலக வளாகத்தையும் தூதுக்குழுவினர் கண்காணித்துள்ளனர். சீனாவின் சோஜிங் நகரின் நகர மேயர் ஹ_அங் ஜிவான் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பொன்றும் நேற்றுமாலை இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது. வீடமைப்பு மற்றும் சொத்து வலயமாக கட்டியெழுப்பப்படவிருந்த கொழும்பு துறைமுக நகரை, நிதி நகரமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதை ஹ_அங் ஜிவான் வரவேற்றதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.

யாழ்- கொழும்பு புகையிரதங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு-

trainயாழ்ப்பாணம்- கொழும்பு புகையிரதங்கள் மீது தொடர்ந்தும் கல்லெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் அந்த புகையிரதங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து நேற்று ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அண்மையில் வவுனியாவை நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்றின் மீது கொழும்பின் புறநகர் ஒருகொடவத்தையில் வைத்து நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலின்போது அநுராதபுரத்தை சேர்ந்த கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தூரச்செல்லும் புகையிரதங்களுக்கு ஆயுதங்களுடன் கூடிய பாதுகாவலர்களின்பாதுகாப்பு நேற்றையதினம் முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் சமூகநலத் திட்டங்கள் சிறந்த முன்னுதாரணம்-நோர்வே பிரதமர்-

norway prime ministerயுத்தத்தின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலத்திட்டங்கள் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக நோர்வே பிரதமர் எர்னா சொல்பர்க் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த அவர் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவ்வாறான திட்டங்கள் ஏனைய நாடுகளின் கொள்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இதன்போது இலங்கையில் இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகள் குறித்து தமது பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் மிரிஸ்ஸவில் அமைந்துள்ள கடற்றொழில் துறைமுகத்தை பார்வையிட்ட அவர், அபிவிருத்தி தொடர்பில் தேவையான வசதிகளை தாம் பெற்று தருவதாகவும் உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐ.நா பொதுச்சபைக்கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு-

maithripalaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளார். அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 17 ஆவது உச்சி மாநாடு செப்ரெம்பர் 17, 18ஆம் திகதி களில்வெனிசுவேலா நாட்டின் கராகஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு, ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது அமர்வில் வரும் 21ஆம் நாள் உரை யாற்றுவதற்காக ஜனாதிபதி நியூயோர்க் செல்லவுள்ளார். அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து வரும் ஜனவரி மாதம் விலகவுள்ள பராக் ஒபாமா, ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்தவுள்ள கடைசி உரை இது என்பதாலும், 10 ஆண்டுகளாக ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்த பான் கீ மூன், இந்த ஆண்டு இறுதியுடன் ஓய்வுபெறவுள்ளதாலும், 71ஆவது ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காணாமற்போனோர் விசாரணை அறிக்கை ஜனாதிபதி செயலரிடம் கையளிப்பு-

140129160658_missing_people_commission_304x171_bbc_nocreditகாணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணை அமர்வுகளில் தங்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் சாட்சியங்கள் தொடர்பான தகவல்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார். இரண்டரை வருடங்கள் செயற்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் கடந்த ஜூலை 15ம் திகதி நிறைவடைந்தது. இந்தக் காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுமார் 6400 சாட்சியங்களை விசாரணை செய்திருந்தனர். பொதுமக்களிடமிருந்து 19000 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் 4800 முறைப்பாடுகள் போலியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு பிரிவில் 5400 பேர் காணாமற்போயுள்ளமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமற் போனோர் சட்டம் நல்லிணக்கப் பாதையின் முக்கிய நகர்வு-பிரிட்டன்-

britishஅரசாங்கத்தினால் காணாமற்போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நல்லிணக்கப் பாதையின் முக்கிய நகர்வாக கருதப்பட முடியும் என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அலுவலகம் ஊடாக காணாமற்போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளது. தாம் நேசித்தவர்களுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும், இதன் ஊடாக நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது. ஆயிரக் கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் அலுவலகம் நடவடிக்கை எடுக்கும் போது சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்பதனை ஒப்புக்கொள்வதாக பிரித்தானியா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்-

unesco chairmanயுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இரினா பொகோவா நாளையதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இரினா பொகோவா அந்த அமைப்பின் பணிப்பாளராக நியமணம் பெற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2030ம் ஆண்டில் இலங்கையில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இரினா பொகோவாவின் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர் எஸ்.பி நாவின்ன உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதுதவிர சீகிரியா உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க 08 இடங்களில் கண்காணிப்பு விஜயத்தினையும் மேற்கொள்ளவுள்ளார். இதற்கிடையில் ஆகஸ்ட் 16ம் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெறவுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விஷேட கலந்துரையாடலிலும் இரினா பொகோவா பங்கேற்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் விரைவில் மீளாய்வு-

sri lankaஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான சட்ட திருத்தங்கள் மற்றும் விசேட ஏற்பாடுகள் தொடர்பில் குறித்த திருத்தத்தில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. இவ் பரிந்துரைகள் தொடர்பில் ஏற்கனவே சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான துணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்மூலமானது பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அவர்களின் தேவைகளை கண்டறிந்து அரசு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பல கடமை பொறுப்புக்களை விதந்துரைக்கின்றது. மேலும் தென்னாபிரிக்க அரிசியலமைப்பின் 198 ஆவது சரத்தின்படி தேசிய பாதுகாப்பு தொடர்பாக துணைக்குழுக்களின் அவசியம் தொடர்பிலும் தனி நபர்கள் அரசுக்கு ஆற்றவேண்டிய கடமைப் பொறுப்புக்களையும் தெளிவாக விளக்குகின்றது. தனி மனிதர்கள் தேசமாக சமத்துவத்தோடு வாழ்வதற்காகவும், சுமுகமான வாழ்வுக்கான தேவைகளையும் வரையறுக்கின்றது. இது சர்வதேச சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்ற துணைக்குழு மற்றும் தேசிய அதிகாரத்துடனான பரப்புகளை கூறுகின்றது. மேலும் இலங்கை மனித உரிமைகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 4ஆம் சரத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்டையில் தேசிய பாதுகாப்பிற்கான தேவையினை அவசியம் பூர்த்திசெய்யவேண்டும்.

காணாமற் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈடு-

kiriyellaகாணாமற் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென உயர்கல்வி அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமற் போனோர் அலுவலகம் குறித்த சட்டம், சட்டவிரோதமானது என்றால் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்கலாம். எனினும் எவரும் நீதிமன்றிற்கு செல்லவில்லை. கடந்த மே 22ஆம் திகதி இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்றின் உதவியை நாடக்கூடிய கால அவகாசம் காணப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் நடுவில் காணப்படும் குழி போன்ற பிரதேசத்தில் நின்றுகொண்டு கூச்சல் இட்டதில் பயனில்லை. சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆசனங்களில் அமர்ந்து கொள்ளுமாறு சபாநாயகர் கோரியிருந்தார். சிலர் செங்கோலை பறித்துச் செல்ல முயற்சித்தனர். காணாமற் போனோர் தொடர்பில் நல்ல விவாதம் ஒன்றை நடத்த சந்தர்ப்பம் இருந்தது. இவ்வாறான ஓர் சட்டமூலம் முதல் தடவையாகவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டு மணித்தியாலங்கள் மேலதிக காலத்தை வழங்கவும் இணங்கப்பட்டிருந்தது. 87, 89 மற்றும் 71ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றியும் பேச அவகாசமிருந்தது. தமது பிள்ளைகள் வீடு திரும்புவார்கள் என இன்னமும் தாய்மார் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டியது எமது கடமையாகும், இவை பற்றி விவாதத்தில் பேசியிருக்கலாம். எனினும் கூட்டு எதிர்க்கட்சி அதனை குழப்பி விட்டது என லக்ஸ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆக்கிரமிப்பினால் வீடு செல்லமுடியாத நிலையில் தையிட்டி மக்கள்-

thaiyittiயாழ். தையிட்டி தெற்குப் பகுதியினை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக செல்ல முடியாது அயலவர்களின் வளவுகள் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதென அப்பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் பிரதான வீதியை விடுவிக்க பிரதேச செயலர், அரச அதிபர், மீள்குடியேற்ற அமைச்சு என்பன உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பாதிகப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலி. வடக்குப் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் சில பகுதிகள் இராணுவத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுக்கப்பட்டன. தையிட்டி தெற்குப் பகுதியும் கடந்த வருட இறுதியில் மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டது. அப்பகுதியில் மக்கள் மீளக்குடியேறி வருகின்றனர். அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலையே நீடிக்கிறது. இந்நிலையில் தையிட்டி தெற்கு விடுவிக்கப்பட்டு 8 மாதங்கள் கழிந்துள்ளபோதும் தையிட்டி பிரதான வீதி இன்னமும் இராணுவம் வசமே உள்ளது. இந்த வீதியை இராணுவம் ஆக்கிரமித்திருப்பதால், வீட்டு வளவுகளின் ஊடாகவே தம் வீடுகளுக்கு மக்கள் செல்ல முடிகிறது. இதனால் சொந்த நிலம் விடுவிக்கப்பட்டும் சொந்த வீட்டுக்கு சுதந்திரமாக செல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலை நீடிப்பதாக அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே இந்த வீதியை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்துத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்-

paravipanchanஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற நிலையை அடுத்து இன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை, இம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்திருந்தார். எனினும், ஏனைய காணிகளையும் விடுவித்து தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு வழிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியே பிரதேச மக்கள் இன்றையதினம் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மடுமாதா திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை-

trainமடுமாதாவின் பெருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 8.10 இற்கு பயணத்தை ஆரம்பித்துள்ள விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து நாளையும் காலை 8.10 இற்கு புறப்படவுள்ள அந்த விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. நாளை மறுதினம் பிற்பகல் 3.30 இற்கு மடு ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள விசேட ரயில், இரவு 10.18 இற்கு நீர்கொழும்பை வந்தடையவுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி முற்பகல் 10.45ற்கு மடு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ள மற்றுமொரு விசேட ரயில், மாலை 6.51 இற்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக நாளாந்தம் கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான சேவையில் ஈடுபடும் ரயில்களுடன் மேலதிகமாக பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

sri_lanka norwayஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேர்க் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நோர்வே பிரதமருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

மீன் ஏற்றுமதி, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்துறை உட்பட பல விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்துவது குறித்து, இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில், அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேர்க் தனது பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNA Norwayநோர்வே நாட்டின் பிரதமருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடுத்துரைத்தார்.
மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் துரிதமாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர், இச்செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பும் அவசியம் எனவும் எடுத்துரைத்தார். Read more

 கொழும்பு நகரத்தில் உள்ள சட்டவிரோத நடைவியாபாரிகளை அகற்ற நடவடிக்கை

colmboகொழும்பு நகரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சட்டத்துக்கு முரணான நடை வியாபாரிகள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.
அதன்படி சட்டவிரோத நடை வியாபாரிகளை உடனடியாக அகற்றுமாறு மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா பொலிஸாருக்கும், கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட ஆய்வின் போது 1158 சட்டவிரோத வியாபாரிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அண்மையில் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த ஆய்வு விபரம் குறித்து கூறப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு நகர எல்லைக்குள் 720 பேர் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அதில் 699 பேர் புறக்கோட்டை பிரதேசத்தில் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

நடைபாதைகளில் அனுமதியற்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 221 லொத்தர் விற்பனை கூடங்களும், சட்டவிரோதமாக வாகனங்களில் விற்பனை செய்யும் 120 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் நடைபாதைகளில் 45 பத்திரிகை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த ஆய்வில் அறியமுடிந்துள்ளதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறியுள்ளது.

08 ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிப்பு
 
Fishஇலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் இருந்து சுமார் எட்டு ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக கடமையாற்றும் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ் பாலசுகமுனியமுக்கு அமைச்சர் இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெளிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த மீன்கள், விநியோகம் செய்யப்படாமையினால் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுத்தியது யார் என்று  அறியுமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

யாராவது தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ இதனுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களிடம் இந்த நட்டத்தை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மணிலா சிறைச்சாலையில் 10 கைதிகள் கொலை 

philippineபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாக சிறை காவலர் காயம் அடைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சிறையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சித்ததின் ஓர் அங்கமாக இது இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போதைக் குற்றங்கள் தொடர்பில் சிறையில் உள்ள 8 குற்றவாளிகள் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்டோ போதை தொடர்புடைய குற்றங்களை எதிர்த்து கடுமையான பிரசாரங்களை தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. டஜன் கணக்கான விநியோகஸ்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மேலும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர.;

லிபியாவில் அரசு ஆதரவு படை முன்னேற்றம் மறுபுறம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

syria_aleppoலிபியாவில், இஸ்லாமிய நாடு என்ற ஐ.எஸ். தீவிரவாதக் குழுவின் செல்வாக்கு மிக்க பகுதியான சிர்டேவை அரசு ஆதரவு கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட ஐ.எஸ் படையினரால், தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்ட,  ஒகடோகு வளாகத்தைச் சுற்றிலும் உள்ள நிலக்கன்னிவெடிகள் மற்றும் குண்டுகளை அரசு ஆதரவுக் குழுவினர் அகற்றி வருகின்றனர். அரசு ஆதரவு குழுவினருக்கு,  அமெரிக்கப் படையினர் வான்வழிப் பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
அப்பகுதியில் ஆப்ரிக்க மற்றும் அரேபிய பிரதிநிதிதிகள் மாநாட்டு அரங்கமாகப் பயன்படுத்திய,  கட்டிடம் பலத்த சேதம் அடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. Read more

viki santhirikaஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற சந்திரிக்கா உதவ வேண்டும்!வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்  Read more

கடத்தலுக்கும் கடல் பாதுகாப்பு துறையினருக்கும் தொடர்பு இருக்கிறதா?- வடமாகாணமுதலமைச்சர்

vikiகடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் பாதுகாப்பு துறையினருக்கும் இடையில் ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா? என்பதுடன், அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா? என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

மாகாண மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more

sasikalaஅதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை இம் மாதம் 22-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், ஜாமீன் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை சசிகலா புஷ்பா அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 1-ம் தேதி, சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கி அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டார். Read more

மூன்று ஆண்டுகளில் 187 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

sri lankaஇலங்கையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த 187 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது, கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர் ஜயந்த சமரவிர எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய அமைச்சர் கயந்த கருனாத்திலக இதனை தெரிவித்தார்.
சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நீதி அமைச்சரினால் ஓய்வுபெற்ற உச்சமன்ற நீதிபதிகள் இருவரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய 2015-ஆம் ஆண்டு 117 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கருனாத்திலக, 2016-ஆ ம் ஆண்டில் இதுவரை 70 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1.36 டிர்லியன் ரூபா வெளிநாட்டுக் கணக்குகளில் மறைத்து வைப்பு

ranil wickramaகடந்த ஆட்சிக் காலத்தில் குறைந்தபட்சம் 1.36 டிர்லியன் ரூபா பணம் வெளிநாடுகளிலுள்ள, அரை அரச நிறுவனங்களின் கணக்குகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த கடன் தொகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவால், நேற்று சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். Read more