எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலானது நாட்டில் உள்ள சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலக அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.
வாக்காளர்கள், தமது பெயர்கள் வாக்காளர் பட்டியல்களில் உள்ளடக்கப்படாமல் இருந்தால், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும். வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடலில் தத்தளித்த இரண்டு வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். தெவுந்தர, தலல்ல கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினரும் கடற்படையின் நிவாரணப் பிரிவினரும் இணைந்து நேற்று இவர்களை மீட்டுள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதி, பூவரசங்குளம் பம்பைமடு இராணுவ முகாமிற்கு சற்றுத் தொலைவில் நோயாளர்களுக்கு பயன்படுத்திய வைத்தியசாலையின் கழிவுப் பொருட்களான சிறஞ்ச் மற்றும் சேலேன் போத்தல்களும் பாவிக்காத நிலையிலும் சில பொருட்களும் காணப்படுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குருமன்காட்டில் நேற்றிரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக ரங்கா, உதவி அமைப்பாளராக நவீந்திரன், நிர்வாகப் பொறுப்பாளராக தயா, உதவி நிர்வாகப் பொறுப்பாளராக கந்தசாமி,
ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்கியது பயங்கரமானது என, தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்கேயை விடுவிக்க கோரி ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வல்லரசு நாடுகள் நான்காம் யுத்தத்திற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அதன் உலக தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதனை வெளியிட்டமைக்காக இன்று வல்லரசு நாடுகள் அவருக்கு எதிராக பல்வேறு குற்றங்களை சுமத்தி அவரை சிறையில் அடைத்து நாடு கடத்த உள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு திம்பிலி இளைஞர் கராட்டி கழகத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும்,
முல்லைத்தீவில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரை இன்றுமாலை கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.