Header image alt text

எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலானது நாட்டில் உள்ள சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலக அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.

வாக்காளர்கள், தமது பெயர்கள் வாக்காளர் பட்டியல்களில் உள்ளடக்கப்படாமல் இருந்தால், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும். வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடலில் தத்தளித்த இரண்டு வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். தெவுந்தர, தலல்ல கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினரும் கடற்படையின் நிவாரணப் பிரிவினரும் இணைந்து நேற்று இவர்களை மீட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த சிலர் கடற்பிரதேசத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் இருவர் கடல் அலைகளினால் அடித்து செல்லப்பட்டிருந்தனர். Read more

வவுனியா – மன்னார் வீதி, பூவரசங்குளம் பம்பைமடு இராணுவ முகாமிற்கு சற்றுத் தொலைவில் நோயாளர்களுக்கு பயன்படுத்திய வைத்தியசாலையின் கழிவுப் பொருட்களான சிறஞ்ச் மற்றும் சேலேன் போத்தல்களும் பாவிக்காத நிலையிலும் சில பொருட்களும் காணப்படுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மன்னார் வீதி, பூவரசங்குளம் பம்பைமடு இராணுவ முகாமிலிருந்து 100மீற்றர் தொலைவில் வெற்றுப்பெட்டிக்கு அருகே குறித்த பொருட்கள் வீதி அருகே வீசிய நிலையில் காணப்படுகின்றன. இவை வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்களாகவும் காணப்படுகின்றன. இதற்குள் சில பொருட்கள் பாவனையற்ற, புதிய நிலையிலும் காணப்படுகின்றது. Read more

வவுனியா குருமன்காட்டில் நேற்றிரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காடு பகுதியில் இன்று மாலை 5மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7மணியளவில் மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல், வாள், கத்திகள் போன்ற வௌ;வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

பிரான்ஸ் நாட்டிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக ரங்கா, உதவி அமைப்பாளராக நவீந்திரன், நிர்வாகப் பொறுப்பாளராக தயா, உதவி நிர்வாகப் பொறுப்பாளராக கந்தசாமி,

நிதிப் பொறுப்பாளராக ஜெயந்தன், அங்கத்துவ நடவடிக்கைப் பொறுப்பாளராக குமரன், தகவல் பிரிவு பொறுப்பாளராக பிரேம்குமார், தகவல் பிரிவு உதவிப் பொறுப்பாளராக ஜெகதீசன், புனர்வாழ்வுப் பொறுப்பாளராக சுகுமார், புனர்வாழ்வு உதவிப் பொறுப்பாளராக பூபாலசிங்கம் ஆகிய தோழர்களும், நிர்வாக அங்கத்தவர்களாக உதயன், குறிஞ்சி, சீலன், சசி, சசி (வவுனியா) ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்கியது பயங்கரமானது என, தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

‘நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கப்போவதாக பெசில் கூறியது பொய். ராஜபக்சர்கள் பேச்சை எவரும் நம்பப்போவதில்லை.’ ‘கட்சியா? நாடா என வரும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட நாட்டுக்கே முன்னுரிமை கொடுப்பேன்.’ ‘கோட்டாவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. Read more

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்கேயை விடுவிக்க கோரி ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வல்லரசு நாடுகள் நான்காம் யுத்தத்திற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அதன் உலக தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதனை வெளியிட்டமைக்காக இன்று வல்லரசு நாடுகள் அவருக்கு எதிராக பல்வேறு குற்றங்களை சுமத்தி அவரை சிறையில் அடைத்து நாடு கடத்த உள்ளனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. அதனை தடுக்க வேண்டும் என்றால் உலகலாவிய ரீதியில் பரந்து வாழும் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். சர்வதேச வல்லரசு நாடுகள் மேற்கொள்ளும் அட்டுழியங்களுக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் தொழிலாளர்கள் நசுக்கப்படுவதனையும் பேச்சு சுதந்திரத்தனையும் எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும். Read more

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு திம்பிலி இளைஞர் கராட்டி கழகத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும்,

முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சருமான கந்தையா சிவநேசன் ஊடாக வழங்கப்பட்ட 10,000ரூபா நிதியினை கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மேற்படி கராட்டி கழகத்திற்கு கையளித்துள்ளார். அவருடன் கட்சி அங்கத்தவர் நகுலனும் உடன் சென்றிருந்தார்.

Read more

முல்லைத்தீவில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் கூறியுள்ளனர். கடத்தப்பட்டவரின் மனைவியின் முறைப்பாட்டிற்கமைய, வவுனியாவைச் சேர்ந்த 42 வயதுடைய ச.நாகேந்திரன் என்பவர் முல்லைத்தீவில் வைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார். Read more

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரை இன்றுமாலை கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்ப்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு தற்போது சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின்போது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.