உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்து கருப்பு ஞாயிறு தினமமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாடு பூராகவும் ´கருப்பு ஞாயிறு´ தினமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர்கள் தீர்மானித்துள்ளனர்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழநத மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காமைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு ஞாயிறு தினம் பிரகடனப்படுத்தப்படுவதாகவும், அன்றைய தினம் கத்தோலிக்க மக்கள் கருப்பு ஆடைகளை அணிந்து பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.